தெலுங்கானாவுக்கு எதிராக ஆக.11-ல் ரயில் மறியல்! ரயிலை மறித்தால் ஜெயில்- போலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான ராயலசீமா, கடலோர ஆந்திர மக்களின் போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. நாளை மறுநாள் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தொடர் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ரம்ஜானையொட்டியே நேற்று இன்றும் சில கடைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை.
கார், லாரிகள் இரவு நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது. பகலில் மக்கள் சாலையில் திரண்டு நின்று அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான போராட்டக் குழு குண்டூரில் கூடி முடிவு செய்தது. பிரிவினைக்கு எதிராக நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றால் தென் இந்தியாவை இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய ரயில் நிலையங்களும் இந்த ராயலசீமா, கடலோர ஆந்திராவில் இருப்பதால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இதனால் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. ரயில் போக்குவரத்துக்கு சிறிய தடை ஏற்படுத்தினாலும் அவர்கள் ஜாமீன் கிடைக்காத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். ரயில்வே சட்டம் அவர்கள் மீது பாயும். நிச்சயம் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications