ஆசியகோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்.. வலைதளங்களில் பதிவு.. பரபரப்பில் கர்நாடகா
பெங்களூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதில் கிரிக்கெட் உலகில் ஹைவோல்டேஜ் போட்டி என கூறப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதின.

இந்தியா வெற்றி
இதில் லீக் போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. துபாயில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் வெற்றி
இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.5வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆறுதல் வெற்றி
இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இலங்கையுடன் இந்தியா தோல்வியடைந்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் 101 ரன்கள் வித்தியாசத்தில் அமோகமாக ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம்
இந்நிலையில் தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் கோஷமிட்டதோடு, பாகிஸ்தான் கொடியுடன் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் டவுனை சேர்ந்த ஷகீல் பாஷா, தோகீத் பாஷா, முன்சூர் உல்லா ஆகியோர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக பாஜக பிரமுகரான ராமான்ஜி சீனிவாசப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஷகீல் பாஷா, தோகீத் பாஷா, முன்சூர் உல்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications