Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 'காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கையா’ என்ற தலைப்பில் பாஜக சமூக ஊடகங்களில் போட்ட பதிவிற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படையினர் பாஜகவின் சமூக வலைதள பக்கத்தின் பதிவிற்காக எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்தார்.

EC files FIR against BJP s social media post titled Congress Manifesto or Muslim League Manifesto


பிரதமர் மோடி கடந்த வாரம் ஷஹரான்பூர், ஆஜ்மீரில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் முத்திரையுடன் இருக்கிறது. அது சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் அரசியலை செய்கிறது” என விமர்சித்திருந்தார். தொடர்ந்து சத்தீஸ்கரில் நடந்த பிரச்சாரத்திலும் அதே கருத்தை முன்வைத்திருந்தார்.

இது ஒருபுறம் எனில் நேற்று (ஏப்ரல் 23) பாஜகவின் அதிகாரப்பூர்வக சமூக வலைதள பக்கத்தில், 'காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அல்லது முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கையா’ என்ற தலைப்பில் என்று பதிவிடப்பட்டிருந்தது .

பாஜகவின் இந்த பதிவில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அமலாக்கம்.
முஸ்லிம்களுக்கு சொத்து பகிர்வு.
முஸ்லிம்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு.
தனிப்பட்ட சட்டங்களைப் பயிற்சி செய்வதற்கான சுதந்திரம்.
முஸ்லிம்கள் நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்ற பதிவுடன் காங்கிரஸை விமர்சித்து பாஜக பதிவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.இந்த புகாரின் பேரில் “இந்திய தண்டனைச் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125 மற்றும் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதலைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இன குடிமக்களுக்கும் இடையே வெறுப்பு மற்றும் பகைமையை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டதாகவும் பாஜக மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மல்லேஸ்வரம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்கள். கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி இந்த தகவலை தெரிவித்தார்.


கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான பிச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+