குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்
பெங்களூரு: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே டிசம்பர் 8-ந் தேதி விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கேப்டன் வருண்சிங், தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வருண்சிங் இன்று காலமானார்
வருண்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இரங்கல் செய்தியில், கேப்டன் வருண்சிங் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க இயலாது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என்றார்.,












Click it and Unblock the Notifications