சாமியார் மடத்தில் கட்டி போட்டு வளர்க்கப்படும் மான்.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் சாமியார் மடம் ஒன்றில் மான் கட்டிப்போட்டு வளர்க்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீதர் மாவட்டத்தில் உள்ள பசவ தர்மா பீடத்தில் இவ்வாறு மான் கட்டிப்போட்டு வளர்க்கப்படுவது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மடத்தின் சாமியார்கள் அந்த, மானுக்கு தீவனம் அளிக்கும் புகைப்படம் வெளியான நிலையில் வன ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள சாமியார் பெயர் பசவ பிரபு. அவர்தான் மான் வாயில் தீவனம் ஊட்டிக் கொண்டிருக்கிறார்.
1972ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 1 கீழ், மான் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அபராதம் மற்றும் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
இதுகுறித்து மடத்தின் சித்த ராமேஸ்வர சுவாமி கூறுகையில், அந்த மான் தற்போது மடத்தில் கிடையாது. அண்மையில் மடத்துக்குள் வந்தது. எனவே அதை பிடித்து தீவனம் போட்டு பழையபடி வனப்பகுதிக்குள் விட்டு விட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பீதர் வனத் துறை பொறுப்பாளர் சிவசங்கர் இதுபற்றி கூறுகையில், மான் மடத்துக்குள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே சாமியார் அமர்ந்து இருக்கும் இருக்கையில் மான் தோல் விரித்து வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் விசாரிக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications