அரசு பெண் அதிகாரியின் அந்தரங்க வீடியோ.. வீட்டுக்குள் கேமரா பொருத்திய 3 பேர் கும்பல்.. ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து பெட்ரூமில் ரகசியமாக கேமரா பொருத்தி அவருடைய அந்தரங்கங்களை வீடியோவாக பதிவு செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அரசு அதிகாரியிடம் ரூ.50 லட்சம் வரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அரசு துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரை 3 பேர் கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.

அப்போது அந்த கும்பல் ‛‛உங்களின் அந்தரங்க வீடியோக்கள் எங்களிடம் உள்ளது.. ரூ.50 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் அந்த வீடியோவை வெளியே ரிலீஸ் செய்துவிடுவோம்'' என்று மிரட்டினர்.
3 பேர் கைது
இதனால் பயந்து போன அந்த பெண் அதிகாரி சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களின் பெயர்கள் சமீர் நிசார் செய்க், அப்துல் ரஷீத் மற்றும் முகமது திலாவர் என்பதும், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்று கூறி இப்படியான பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
சாவி கிடைத்தது எப்படி?
இந்த 3 பேர் கும்பல் பெண் அதிகாரியின் அந்தரங்க வீடியோக்களை எப்படி படம்பிடித்தனர் என்பது பற்றி போலீசார் திடுக்கிட வைக்கும் தகவலை கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: ‛‛பெண் அரசு அதிகாரி ஒருவர் மாலமாருதி போலீசில் செய்த புகாரில் 3 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் பெண் அதிகாரி வீட்டில் சாவி வைக்கும் இடத்தை அறிந்து கொண்டனர்.
அரசு அதிகாரி தனது வீட்டு சாவியை கதவின் அருகே வைத்து செல்வார். வீட்டில் வேலை செய்யும் நபருக்கு பணம் கொடுத்து சாவி இருக்கும் இடத்தை அறிந்து அதனை வைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
ரகசிய கேமரா
அதன்பிறகு அரசு அதிகாரியின் பெட்ரூமில் உள்ள லைட் ஹோல்டருக்குள் ரகசியமாக கேமராவை வைத்துள்ளனர். இதற்காக அவர்கள் பிரத்யேகமான கேமராக்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.
இந்த கேமரா மூலமாக பெண் அதிகாரியின் அந்தரங்கங்களை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். பெண் அதிகாரி எங்களிடம் புகார் செய்தார்.
3 பேர் சிக்கியது எப்படி?
நாங்கள் அவரிடம் பணம் தருகிறேன் என்று குறிப்பிட்ட இடத்துக்கு 3 பேரையும் அழைத்தோம். அவர்கள் 3 பேரும் அங்கு வந்தபோது அவர்களை கைது செய்தனர். கைதானவர்களிடம் 3 செல்போன்கள், 64 ஜிபி பென்டிரைவர், 6 கேமராக்கள், 2 ஓடிஜி டிரைவ்ஸ், 128 ஜிபி மெமரி கார்டுகள் 8 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டு வேலைக்காரரை தேடிவருகிறோம்.
கைதான 3 பேரும் இதுபோல் இன்னும் பலரை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களின் வீட்டு சாவியை வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து செல்லக்கூடாது. கையோடு கொண்டு செல்வது நல்லது. ஏனென்றால் இங்கு அரசு அதிகாரி தனது வேலைக்காரரை நம்பி கதவு அருகே சாவியை விட்டு சென்றது தான் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாகும். இதனால் கவனமாக இருக்க வேண்டும்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications