மத்திய அரசின் மானிய குறைப்பு திட்டம்- சிலிண்டர்கள் விலை உயரும் அபாயம்
Subscribe to Oneindia Tamil

வரும் 26 ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடி உடனடியாக மேற்க்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நிதி, பெட்ரோலியம் , உரம் மற்றும் ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் செயல் திட்டங்களை தயாரித்து வருகின்றனர்.
இதில் பெட்ரோலியம் துறை தயாரிக்கும் திட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்த வேண்டும் எனவும் மானிய விலையில் வழங்கபடும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் செயல் திட்டத்தில் வலியுறுத்தபட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications