பெட்ரோல் விலை உயர வாய்ப்பில்லை: தர்மேந்திர பிரதான் உறுதி!
பாக்தாத்: ஈராக்கில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வந்தாலும், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எவ்வித தடையும் இல்லாததால் பெட்ரோல் விலை தற்போதைக்கு உயராது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அந்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களான மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா, தல் அபார் போன்றவற்றை கைப்பற்றி விட்ட தீவிரவாதிகள், பாய்ஜியில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் கைப்பற்றும் எண்ணத்தில் பயங்கரமாக போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ''ஈராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தாலும், அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி வழக்கம் போல் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. எனவே, தற்போதைக்கு பெட்ரோல் விலை உயராது'' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் பேரலுக்கு 5 டாலர் உயர்ந்து 112 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. எனினும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications