டிஜிட்டல் இந்தியா: இனி ரூ.2,000 வரை டெபிட் கார்டு பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது
டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: டிஜிட்டல் பண பாிவா்த்தனையில் டெபிட் காா்டுகளை பயன்படுத்தும்போது எம்.டி.ஆா். தொகை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவது வழக்கம். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மக்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெபிட் காா்டுகளை பயன்படுத்தி ரூபாய் 2 ஆயிரம் வரை பணபாிவா்த்தனைகளில் ஈடுபடுபவா்களுக்கான கழிவுத் தொகையை அரசே செலுத்தும் என்று மத்திய அமைச்சா் தொிவித்துள்ளாா்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசானது கருப்பு பொருளாதாரத்தை ஒழிக்கும் விதமாக அனைத்து விதமான ரொக்க நடவடிக்கைகளையும் முடிந்த வரையிலும் மின்னணு பரிவர்த்தனைகளாக மாற்றம் செய்ய முடிவெடுத்தது.
இதன் முதல் அதிரடி நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ஆகிய உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. கூடவே குறைந்த அளவிலான ரொக்க நடவடிக்கையையும் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முன்வந்தது.
மேலும் அதிக அளவில் மின்னணு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளையும் அளித்து பாராட்டியது. இதன்மூலம் மேலும் அதிகப்படியான நபர்கள் மின்னணு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முன்வருவார்கள் என்று நம்பியது.
மத்திய அரசு இவ்வாறு நினைத்தாலும் பெரும்பாலான பொதுத்தறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு அதிகப்படியாக பரிவர்த்தனை கட்டணங்களை (Transaction Charges) போட்டுத் தாக்கியது.
போதாக்குறையாக தற்போது பரிவர்த்தனை கட்டணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவிகிதம் (சேவை வரியாம்?) ஜிஎஸ்டி கட்டணம் வேறு. இதனால் ஒவ்வொறு முறையும் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போதும், ஐயையோ, இதற்கு எவ்வளவு சேவைக் கட்டணம் தீட்டுவார்களோ என்று வாடிக்கையாளர்களின் மனம் கணினியைவிட மிக வேகமாக கணக்கு போடத்தொடங்கிவிடும்.
இதனால் வெறுத்துப்போன வாடிக்கையாளர்கள் எதற்கு வம்பு என்று பெரும்பாலும் ரொக்க பரிவர்த்தனையாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கிகள் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு ஏடிஎம் மற்றும் மின்னணு பரிவர்த்தனைக்கு வசூலிக்கும் பரிவர்த்தனை கட்டணங்களின் வரம்பை குறைக்கத் தொடங்கிவிட்டன.
தற்போது மத்திய அரசும் ஒருபடி மேலே போய், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலும் டெபிட் கார்டுகள் மூலம் ஒவ்வொரு முறையும் 2000 ரூபாய் வரையிலும் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதனால் ஏற்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணத்தை (Merchant Trade Discount) மத்திய அரசே வங்கிகளுக்கு வழங்கிவிடும் என்று அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் வெள்ளியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்ட் பயன்படுத்தி இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தினால், வணிகர் கழிவுத்தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
இதனால், மத்திய அரசுக்கு சுமார் 2512 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும், ஆயினும் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த கூடுதல் சுமையை ஏற்றுக்கொள்வதென்றும் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications