பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் இரண்டாம் நாளாக மீண்டும் சரிவு!
ரூ. 11 ஆயிரம் கோடி மோசடிப் புகாரின் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் இரண்டாவது நாளாக இன்றும் சரிந்துள்ளது.
Recommended Video

மும்பை : அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைத் தந்து வெளிநாட்டு வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து ரூ. 11 ஆயிரம் கோடி அளவிற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில் இரண்டாவது நாளாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 6 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பரோடி கிளையில் வங்கி அதிகாரிகளே சில வாடிக்கையாளர்களின் கடன் ஏற்றுமதிக்கான பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்துள்ளனர். இதே போன்று வாடிக்கையாளர்கள் ஆதாயம் அடைவதற்காக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மூலம் வெளிநாட்டு வங்கிகளிலும் ரூ. 11 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குச்சந்தைக்கு நேற்று அளித்த கடிதத்தில் கூறி இருந்தது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் இந்த வங்கியின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியைக் கண்டன. இதனால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இரண்டுமே இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. எனினும் பஞ்சாப் நேஷனல் பங்குகள் 6 சதவீத சரிவுடனேயே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இந்த சரிவு மீளாமல் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் இந்த வங்கியில் முதலீடு செய்துள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications