10,000 பொறியியல் மாணவர்கள் தேர்வில் தோல்வியா? அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
சென்னை: பொறியியல் தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 பேரை தேர்வு எழுதவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு பொறியியல் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்காக தேர்வு தொடங்கும் நேரத்தில் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வானது காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும். குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைத்தாளை மாணவர்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு. இதைத் தாண்டி ஒன்றரை மணி நேரத்துக்குள் அதாவது பிற்பகல் 2 மணிக்குள் விடைத் தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

10,000 மாணவர்கள் தாமதம்
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும், கூடுதல் நேரத்தையும் கடந்து சுமார் 10,000 மாணவர்கள் விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இவ்வாறு கால தாமதமாக விடைத் தாள் பதிவேற்றம் செய்த மாணவர்களை தேர்வில் பங்கேற்காதவர்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியானது.

பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
விடைத் தாள்களை திருத்தம் செய்யும் பணிக்கு வந்த ஆசிரியர்களிடம், தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்களை திருத்தக் கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களை ஆப்செண்ட் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், "மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தது உண்மைதான். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் தரப்பில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆப்செண்ட் போடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை." எனக் கூறி இருக்கிறார்.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்த தேர்வு
அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மார்ச் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளது. காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்ற தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications