Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10,000 பொறியியல் மாணவர்கள் தேர்வில் தோல்வியா? அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியியல் தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 பேரை தேர்வு எழுதவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு பொறியியல் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்றது.

இதற்காக தேர்வு தொடங்கும் நேரத்தில் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வானது காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும். குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைத்தாளை மாணவர்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு. இதைத் தாண்டி ஒன்றரை மணி நேரத்துக்குள் அதாவது பிற்பகல் 2 மணிக்குள் விடைத் தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

10,000 மாணவர்கள் தாமதம்

10,000 மாணவர்கள் தாமதம்

இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும், கூடுதல் நேரத்தையும் கடந்து சுமார் 10,000 மாணவர்கள் விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இவ்வாறு கால தாமதமாக விடைத் தாள் பதிவேற்றம் செய்த மாணவர்களை தேர்வில் பங்கேற்காதவர்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியானது.

 பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

விடைத் தாள்களை திருத்தம் செய்யும் பணிக்கு வந்த ஆசிரியர்களிடம், தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்களை திருத்தக் கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களை ஆப்செண்ட் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், "மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தது உண்மைதான். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் தரப்பில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆப்செண்ட் போடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை." எனக் கூறி இருக்கிறார்.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்த தேர்வு

பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்த தேர்வு

அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மார்ச் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளது. காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்ற தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+