Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசமான இதய நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை! உயிர் காக்க உதவுங்கள்.. ப்ளீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி கனுஷ்கா, பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறந்தாள். சிறு வயதிலேயே அவளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை முழுமையாகச் சீராகவில்லை. இப்போது மீண்டும் ஒரு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்யலாம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி கனுஷ்கா. நான்கு வயதே ஆன இவருக்குப் பிறக்கும்போதே இதயக் குறைபாடு இருந்துள்ளது. இதனால் அவரது உயிரைக் காப்பாற்ற ஒரு வயதானபோது, அவளுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு (VSD) அடைப்பு, மூன்று வால்வு சீரமைப்பு மற்றும் நுரையீரல் வால்வு வெட்டல் போன்ற சிக்கலான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

Heart Condition

இந்த ஆபரேஷனுக்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்றே அவரது பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. தற்போது கனுஷ்காவுக்கு முகத்தில் வீக்கம், வயிற்றில் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் எடைக் குறைவு ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற குழந்தைகளைப் போல் ஓடியாடி விளையாட முடியாமல், எப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார். தாயிடம் சென்று மற்ற குழந்தைகளைப் போல ஏன் தன்னால் ஓட முடியவில்லை என்று கேட்கிறாள்.

மியோட் மருத்துவமனை மருத்துவர்கள் கனுஷ்காவுக்கு மீண்டும் ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவை என்று கூறியுள்ளனர். இந்த முறை, அவளுக்கு மேலும் மூன்று வால்வு சீரமைப்பு மற்றும் பலவீனமான இதயத்தை ஆதரிக்க வலது பி.டி.ஜி செயல்முறை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கனுஷ்காவின் உயிரைக் காப்பாற்ற இந்த அறுவை சிகிச்சை நிச்சயம் தேவை.!

Heart Condition

இது தொடர்பாக கனுஷ்காவின் தந்தை ரவிக்குமார் கண்ணீருடன் கூறுகையில், "ஒரு முறை அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவளைக் காப்பாற்றி விட்டோம் என்றே நினைத்தோம். ஆனால் மீண்டும் இப்படி ஒரு நிலை வரும் என்று நினைக்கவில்லை. எங்களிடம் இப்போது இதற்கான சக்தியோ பணமோ இல்லை. எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டோம். இப்போது மக்களின் கருணையை மட்டுமே நம்பி இருக்கிறோம்" என்றார்.

ரவிக்குமார் ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவர் ஒரு நாளைக்கு ₹250 மட்டுமே சம்பாதிக்கிறார். அவர்கள் ஏற்கனவே முதல் அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகு தேவைப்படும் சிகிச்சைகளுக்கும் கையில் இருந்த சேமிப்பு அனைத்தையும் செலவழித்துவிட்டார்கள். தற்போது அவர்கள் பொருளாதார ரீதியாக உடைந்து, மனதளவில் சோர்ந்து, தங்கள் குழந்தையை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் வாழ்கிறார்கள்.

இது குறித்து கனுஷ்காவின் தாய் ரேவதி கூறுகையில், "அவள் நெஞ்சு வலியால் அழுது கொண்டே எழுகிறாள். ஒரு தாயாக, அவள் இப்படிக் கஷ்டப்படுவதைப் பார்ப்பது எனக்கு ஒவ்வொரு நாளும் வேதனையாக இருக்கிறது. அவளுக்குப் பதிலாக நான் என் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.

Heart Condition

இக்கட்டான நிலையில் இருக்கும் கனுஷ்காவுக்கு உங்களுடைய ஆதரவு மட்டுமே ஒரே நம்பிக்கை. அவரது அறுவை சிகிச்சையை மேலும் தள்ளிப்போட முடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். உங்களது கருணை மட்டுமே கனுஷ்காவுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு குழந்தைப் பருவத்தைத் தரலாம். எவ்வளவு சிறிய தொகை என்றாலும் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்! அது கனுஷ்காவுக்கு நிச்சயம் உதவும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+