திருவேற்காட்டில் நகராட்சி அதிகாரி சாந்தி கையில் என்னது அது.. ஒரே நொடியில் காலி செய்த பெண்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான நிலம் திருவேற்காடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் வீடு கட்ட கடன் பெறுவதற்காக நிலம் வரன்முறை அனுமதி பெறுவதற்கு திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த நகரமைப்பு அதிகாரி சாந்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பணத்தை பெற உதவி செய்தவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டியதே இல்லை.. லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆதாரத்துடன் சென்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தால், ரசாயணம் தடவிய நோட்டுகளை தந்து கையும் களவுமாக அதிகாரியை பிடிப்பார்கள். உதவி செய்யும் புரோக்கர்கள் மற்றும் உதவியாளர்களும் இந்த பொறியில் சிக்குவார்கள். அப்படித்தான் திருவேற்காட்டில் சிக்கியுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி என்பவருக்கு திருவேற்காட்டில் சொந்தமாக நிலம் அமைந்திருக்கிறது. அந்த நிலத்தில் வீடு கட்ட கடன் பெற ஜெயலட்சுமி விரும்பினார். அதற்கு முறையாக நிலம் வரன்முறை அனுமதி பெற வேண்டும். அதற்கு ஜெயலட்சுமி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அப்படி நிலம் வரன்முறை அனுமதி பெற வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என திருவேற்காடு நகரமைப்பு அதிகாரி சாந்தி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று மாலை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயலட்சுமியிடம் கொடுத்து அனுப்பினார்கள். அப்போது நகரமைப்பு அதிகாரி சாந்தி, பணத்தை அலுவலகத்திற்கு வெளியே சக்திவேல் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. ஜெயலட்சுமி கொடுத்த பணத்தை சக்திவேல் பெற்றுக்கொண்ட போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தார்கள்.
விசாரணையில், நகரமைப்பு அதிகாரி சாந்தியின் உத்தரவின் பேரிலேயே பணத்தை வாங்கியதாக சக்திவேல் கூறினார். இதையடுத்து சாந்தி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications