'திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்'.. அரசியல் நிகழ்வுக்காக வரவில்லை என பேட்டி
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகையும், ஆந்திர பிரதேச சுற்றுலா அமைச்சருமான ஆர்.கே ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அங்கு பேட்டியளித்த அவர் அரசியல், பொது நிகழ்ச்சிக்காக வரவில்லை சாமி தரிசனம் செய்வதற்காகவே வந்தேன் என பேசினார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடாக திருத்தணி ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமி கோவில் திழந்து வருகிறது.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

முருகன் கோவிலில் நடிகை ரோஜா
இந்த நிலையில் ஐப்பசி முதல் நாளான இன்று அதிகாலை திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகையும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆர்.கே ரோஜாவும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் அதிகாலையிலேயே குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார்.

ரோஜாவுடன் புகைப்படம் எடுத்த பக்தர்கள்
கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜாவுக்கு தொடர்ந்து பூஜை முடிந்ததும் திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்கள் மற்றும் பூமாலைகள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மலைக் கோயிலில் கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது பக்தர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுக்க அலை மோதினர். அவர்களுடன் நடிகை ரோஜா புகைப்படம் எடுத்தார்.

மகிழ்ச்சியாக உள்ளது
தொடர்ந்து கோவில் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை ரோஜா கூறியதாவது:- திருத்தணி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காகவே இன்று வந்தேன். எனது அண்ணன் மற்றும் அண்ணியாருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோவிலில் அபிஷேக நிழச்சியை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தேன்.

சாமி கும்பிடவே வந்தேன்
அரசியல் நிகழ்வுக்காகவோ.. அல்லது வேறு எந்த பொது நிகழ்வுக்காகவோ நான் வரவில்லை. சாமி தரிசனம் செய்வதற்காகவே கோவிலுக்கு வந்தேன். இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா காவடி எடுத்து தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications