தூள் தூளாக சிதறிய "கணக்கு".. செம டென்ஷனில் எடப்பாடியார்.. எனினும் விடாத கடைசி நம்பிக்கை..!
சென்னை: உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு காரணம் நேற்றைய தினம் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள்தான் என்கிறார்கள்!
தேர்தலுக்கு முன்பிருந்தே மிகுந்த நம்பிக்கையில் இருப்பவர் எடப்பாடியார்.. பிரச்சாரத்தின்போதே இவரிடம் தன்னம்பிக்கையும், வீரியமும் அதிகமாகவே காணப்பட்டது.. அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, இவர்தான் பிரச்சாரத்தை முதலில் கையில் எடுத்தார்.. தனித்தே பிரச்சாரத்துக்கு சென்றார்..
தனி ஒருவராகவே தமிழகம் முழுக்க வலம் வந்து வாக்குகளை சேகரித்தார்.. ஓபிஎஸ்கூட ஓரிரு இடங்களுக்கு மட்டுமே சென்றார்.. ஆனால், எடப்பாடியார் அளவுக்கு அதிமுகவில் அப்படி ஒரு தீவிரத்தை யாரும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. வாக்குப்பதிவு அன்றும் அதிமுகவே வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தவர்..

ஆலோசனை
எத்தனையோ அமைச்சர்கள் கலங்கி போய் இவருக்கு போனை போட்டபோதும்சரி, பலமுறை நடத்திய ஆலோசனைகளிலும் சரி, அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தார்.. இதற்கெல்லாம் காரணம், தனிப்பட்ட முறையிலும், தனியார் ஏஜென்சிகள் மூலமும், உளவுத்துறை மூலமும், கள நிலவர ரிப்போர்ட்டை கேட்டு பெற்றிருந்தார்.. அதில், 130 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியிருந்ததுதான், முதல்வரின் நம்பிக்கைக்கு காரணம்.

எடப்பாடியார்
ஆனால், நேற்று சாயங்காலம் வந்த எக்ஸிட் போல் முடிவுகள் எடப்பாடியாரின் நம்பிக்கையை ஓரளவு தகர்த்து விட்டதாம்.. அதிமுகவுக்கு 70-ஐ தாண்டாது என்ற கணிப்பும் அவருக்கு டென்ஷன் ஏற்படுத்தி விட்டதாம்.. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சில சமயங்களில் முடிவுகளை மாற்றியமைக்கக்கூடும் என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் நேற்று அதிமுகவுக்கான சாதகமான முடிவை சொல்லவில்லை என்பதே உண்மை.

திமுக
ஒருவேளை டைம்ஸ் நவ்-சிவோட்டர் மட்டுமாவது அதிமுக ஜெயிக்கும் என்று சொல்லும் என கணக்கு போடப்பட்டது.. அந்த நிறுவனமும் திமுகவே ஜெயிக்கும் என்று சொல்லிவிட்டதுதான், முதல்வருக்கு அதிர்ச்சியாக இருந்ததாம். சசிகலா இல்லாமலேயே தென்மாவட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்பினார், கடைசியில் அதுவும் இல்லை..

தென்மாவட்டம்
ஒருவேளை தென்மாவட்டம் இல்லாவிட்டாலும் வடமாவட்டமாவது கைகொடுக்கும் என்றுதான் பாமக இடஒதுக்கீடு விஷயத்தில் கணக்கு போட்டார்.. கடைசியில் அதுவும் இல்லை.. தன் கைவசம் இருந்த கொங்குவும் திமுகவின் பிடியில் சென்றுள்ளதாக எக்ஸிட்போல்கள் தெரிவித்து விட்டன.. அதனால், எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகி விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்... இது எல்லாவற்றிற்கும் மேலாக, 130 இடங்களில் அதிமுக ஜெயிக்கும் என்று கணித்து தந்தவர்கள் மீதுதான் செம கோபத்தில் இருக்கிறாராம்..!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications