9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவிட்டது. கட்சியின் பொன்விழா காணும் அதிமுக இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான தோல்வியை சந்தித்து சொற்ப இடங்களில்தான் வென்றுள்ளது.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி மாதம் எண்ணப்பட்டன.
அப்போது மொத்தம் 514 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகளில் என்னதான் அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதிக இடங்களைப் பெற்ற போதும் அதிமுகவும் கடும் போட்டியை கொடுத்திருந்தது. கணிசமான இடங்களைக் கைப்பற்றியது.

திமுக-அதிமுக சமநிலை
2019-ல் நடைபெற்ற 514 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 244; அதிமுக 214; பா.ம.க. 16; காங்கிரஸ் 15; சி.பி.ஐ- 7; பாஜக-7; தேமுதிக- 3; சி.பி.எம்- 2; த.மா.கா- 3; மற்றவை -22 என இடங்களைப் பெற்றிருந்தன. ஏறத்தாழ திமுகவும் அதிமுகவும் சமநிலையில் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

கவுரவமான இடங்கள்
5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலிலும் ஏறத்தாழ இதே சமபலம் தொடர்ந்தது. அத்தேர்தலில் திமுக 2095; அதிமுக 1792; பாமக 224 ;காங்கிரஸ் 133; தே.மு.தி.க 97; பா.ஜ.க 83; சி.பி.ஐ. 64; சிபி.எம். 33; த.மா.கா-23; இதர கட்சிகள்- 793 என முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் கூட அதிமுக கவுரவமான இடங்களைத்தான் பெற்றது எனலாம்.

9 மாவட்ட தேர்தல் முடிவுகள்
ஆக அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பு, வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது என்பதையே இதுவரையிலான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் தற்போதைய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் இடங்கள் அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 120 இடங்களில் வென்றிருக்கிறது. அதிமுகவோ சிங்கிள் டிஜிட்டில் போராடுகிறது. 1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 190 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 17 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது.

கடும் பின்னடைவு ஏன்?
பொன்விழா ஆண்டு கொண்டாடும் அதிமுகவுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய பின்னடைவு. இதுவரை இப்படியான ஒரு தோல்வியை அதிமுக சந்தித்தது இல்லை என்றே சொல்லலாம். இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் பாமகவை தக்க வைக்காமல் அதிமுக கோட்டைவிட்டதும் இந்த பின்னடைவுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லலாம். ஏனெனில் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் பாமக கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. அதனால் பாமகவை எப்படியாவது தக்க வைத்திருக்கலாம். அதிமுகவின் உட்கட்சி அரசியலில் பாமகவுடன் மல்லுக்கட்ட வேண்டிய எதிர்பாராத நிலை உருவானது. அதைத் தவிர்த்திருந்தால் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கவுரவமான இடங்களை நிச்சயம் அதிமுக பெற்றிருக்க முடியும்.

வியூகங்களை சரி ச்செய்ய வேண்டும்
அதேபோல் பாஜகவை பற்றி கவலைப்படாமல் முடிவெடுத்திருக்க வேண்டும். அல்லது கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில் தேமுதிகவை இழுத்துப் போட்டிருக்கலாம். அதிமுகவின் உட்கட்சி மோதல்கள், கூட்டணி வியூகங்களில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய தொய்வுகள் ஆகியவற்றை அதிமுக இனிவரும் காலத்திலாவது சரி செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது என்பதுதான் தொண்டர்களின் கருத்து.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications