ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி! கம்பீர குரலால் வசீகரித்தவர் காலமானார்
சென்னை: ‛அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ‛ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87 ஆகும்.
தொலைக்காட்சி அதிகமாக பயன்பாட்டுக்கு வராத காலத்தில் மக்கள் அதிகமாக வானொலி கேட்டு தான் அன்றாட செய்திகளை அறிந்து கொண்டனர். இதனால் வானொலி கேட்பது என்பது பலருக்கும் வாடிக்கையாக மாறி போனது.
வானொலியில் முகம் தெரியாது என்பதால் குரல் மட்டுமே ஒவ்வொருவருக்கும் அடையாளமாகும். இதனால் ஒவ்வொருவரின் தமிழ் உச்சரிப்பு, செய்தியை எடுத்து கூறும் ஸ்டைல் உள்ளிட்டவற்றால் சிலர் புகழ் பெற்றனர்.

சரோஜ் நாரயண்ஸ்வாமி
அதன்படி அன்றைய காலத்தில் வானொலியில் வசீகர குரலால் நம்மை வசீகரித்தவர்களின் முக்கியமானவர் தான் சரோஜ் நாராணயணஸ்வாமி. இவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றியானார். ‛‛ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' என அவர் கூறுவதற்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

35 ஆண்டு பணி
மேலும் அவர் தனது தனித்துவ கம்பீர குரலால் செய்திகளை எடுத்துரைக்கும் விதம் அனைவரையும் ஈர்த்தது. இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. உள்ளூர் முதல் உலகத்தின் ஒவ்வொரு இடங்களிலும் நடக்கும் விஷயங்களை அவர் குரலில் கேட்டு அறிந்ததை இன்றும் பலர் மறக்கவில்லை. 35 ஆண்டுகள் வரை வானொலியில் பணியாற்றிய அவர் அதன்பிறகு ஓய்வு பெற்றார்.

மும்பையில் காலமானார்
அதன்பிறகு தமிழ் படங்கள், ஆவணப்படங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் சின்னஞ்சிறு வயது முதல் நம் நெஞ்சங்களை கம்பீர குரலுடன் வசீகரித்து ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒலித்த கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாராயணஸ்வாமி இன்று காலமானார். பணி ஓய்வுக்கு பிறகு மும்பையில் வசித்து வந்த அவர் இன்று காலமாகி உள்ளார். அவருக்கு வயது 87.

கலைமாமணி விருது
சரோஜ் நாராயணஸ்வாமியின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் முடித்த அவர் தமிழில் புலமை பெற்று திகழ்ந்தார். அதன்பிறகு திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications