Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி! கம்பீர குரலால் வசீகரித்தவர் காலமானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ‛ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87 ஆகும்.

தொலைக்காட்சி அதிகமாக பயன்பாட்டுக்கு வராத காலத்தில் மக்கள் அதிகமாக வானொலி கேட்டு தான் அன்றாட செய்திகளை அறிந்து கொண்டனர். இதனால் வானொலி கேட்பது என்பது பலருக்கும் வாடிக்கையாக மாறி போனது.

வானொலியில் முகம் தெரியாது என்பதால் குரல் மட்டுமே ஒவ்வொருவருக்கும் அடையாளமாகும். இதனால் ஒவ்வொருவரின் தமிழ் உச்சரிப்பு, செய்தியை எடுத்து கூறும் ஸ்டைல் உள்ளிட்டவற்றால் சிலர் புகழ் பெற்றனர்.

சரோஜ் நாரயண்ஸ்வாமி

சரோஜ் நாரயண்ஸ்வாமி

அதன்படி அன்றைய காலத்தில் வானொலியில் வசீகர குரலால் நம்மை வசீகரித்தவர்களின் முக்கியமானவர் தான் சரோஜ் நாராணயணஸ்வாமி. இவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றியானார். ‛‛ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' என அவர் கூறுவதற்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 35 ஆண்டு பணி

35 ஆண்டு பணி

மேலும் அவர் தனது தனித்துவ கம்பீர குரலால் செய்திகளை எடுத்துரைக்கும் விதம் அனைவரையும் ஈர்த்தது. இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. உள்ளூர் முதல் உலகத்தின் ஒவ்வொரு இடங்களிலும் நடக்கும் விஷயங்களை அவர் குரலில் கேட்டு அறிந்ததை இன்றும் பலர் மறக்கவில்லை. 35 ஆண்டுகள் வரை வானொலியில் பணியாற்றிய அவர் அதன்பிறகு ஓய்வு பெற்றார்.

 மும்பையில் காலமானார்

மும்பையில் காலமானார்

அதன்பிறகு தமிழ் படங்கள், ஆவணப்படங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் சின்னஞ்சிறு வயது முதல் நம் நெஞ்சங்களை கம்பீர குரலுடன் வசீகரித்து ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒலித்த கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாராயணஸ்வாமி இன்று காலமானார். பணி ஓய்வுக்கு பிறகு மும்பையில் வசித்து வந்த அவர் இன்று காலமாகி உள்ளார். அவருக்கு வயது 87.

கலைமாமணி விருது

கலைமாமணி விருது

சரோஜ் நாராயணஸ்வாமியின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் முடித்த அவர் தமிழில் புலமை பெற்று திகழ்ந்தார். அதன்பிறகு திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+