கீழடி நகரம் கண்டுபிடிக்க வழிகாட்டிய முதியவர்.. மனம் திறந்த அமர்நாத் ராமகிருஷ்ணா
சென்னை: கீழடி ஆராய்ச்சிக்கு வழிகாட்டியதே ஒரு முதியவர்தான் என இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் நேற்று கீழடியில் கிளைவிட்ட வேர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கீழடி நாகரிகத்தை சங்க கால நாகரிகம் என அழைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த ஆய்வின் முதல்கட்ட பணியாக தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள தொல்லியல் மேடுகளை கண்டறிவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

வீடு கட்ட குழி
அப்போது வருசநாடு அருகே சீல முத்தையாபுரம் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தோம். அப்போது உடைந்த பானைகள், ஓடுகள், கல்வெட்டுகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டறிந்தோம். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார்.

நெருப்பினாலான குடுவை
அப்போது அதிலிருந்து ஒரு சிவப்பு, கருப்பு நிறத்தினாலான குடுவை கிடைத்தது. அதை அவர் தொல்லியல் துறையிடம் கொடுத்தார். அந்த குடுவை பழமையான சங்க காலத்தை சேர்ந்தது. அதுவும் நெருப்பினால் சுடப்பட்ட குடுவை என தெரியவந்தது.

200 கிராமங்கள்
அந்த முதியவர் முதன்முதலாக தொல்லியல் துறையினரிடம் காண்பித்த குடுவைதான் வைகை நதிக்கரையில் இரு புறமும் தொல்லியல் மேடுகள் கொண்ட 200 கிராமங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த கிராமங்களில் ஒன்றுதான் கீழடி.

கூடுதல் காலங்கள்
அந்த முதியவர் மட்டும் அந்த குடுவையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே இருந்திருக்கும். இதுகுறித்த ஆய்வுக்கு இன்னும் கூடுதல் காலங்கள் பிடித்திருக்கலாம் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications