பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் 5 மாவட்டங்களில் மட்டுமே வெற்றியை இலக்காக கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
வருகிற 30-ம் தேதி தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொள்கிறார்.

9 மாவட்டங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, தென்காசி என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 மாவட்டங்களில் வெற்றியை இலக்காக தீர்மாணித்து அந்த மாவட்டங்களில் முழு கவனத்தை திருப்பியிருக்கிறது பாமக தலைமை. நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் பயணம் மேற்கொள்ளவில்லை.

பிரச்சார விவரம்
வரும் 30-ம் தேதியன்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதேபோல் அக்டோபர் 1-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களில் வாக்கு சேகரிக்கும் அவர் அக்டோபர் 2-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்.

தனித்து போட்டி
அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தல் மூலம் கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தை சோதனை செய்து கொள்ள முயற்சிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பாமகவை சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருந்தால் தான் அது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு வலிமை சேர்க்கும் எனக் கருதும் ராமதாஸ் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் 5 மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

பாமக எம்.எல்.ஏ.க்கள்
இதனிடையே அன்புமணி ராமதாஸ் மட்டுமல்லாமல் பாமகவை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களும் 5 மாவட்டங்களில் பொறுப்பை ஏற்று தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை, குறிப்பாக அதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் உள்ளடங்குவதால் தேர்தல் வெற்றியை கவுரவ பிரச்சனையாக கருதுகிறது பாமக தலைமை.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications