திடீர் திருப்பம்.. ஜெ. மரணம் தொடர்பாக மறு விசாரணை தேவை.. அப்பல்லோ மருத்துவமனை பிரமாண பத்திரம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக மருத்துவர் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ஆறுமுகசாமி ஆணையத்திடம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சுமார் 75 நாட்களாக வெளி உலகத்திற்கு தெரியாமல் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இந்த சிகிச்சையில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடமும் இந்த ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் தவறாக, பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. எனவே, மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து புதிதாக விசாரணை நடத்தி சரியாக வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
intubation என்ற வார்த்தை incubation என்றும், Enterococcus பேக்டீரியா என்பது, Endocarditis என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோலத்தான் மேலும் பல வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பிரமாண பத்திரம் சுட்டிக்காட்டுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications