திடீர் திருப்பம்.. ஜெ. மரணம் தொடர்பாக மறு விசாரணை தேவை.. அப்பல்லோ மருத்துவமனை பிரமாண பத்திரம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக மருத்துவர் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ஆறுமுகசாமி ஆணையத்திடம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சுமார் 75 நாட்களாக வெளி உலகத்திற்கு தெரியாமல் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இந்த சிகிச்சையில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடமும் இந்த ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் தவறாக, பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. எனவே, மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து புதிதாக விசாரணை நடத்தி சரியாக வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
intubation என்ற வார்த்தை incubation என்றும், Enterococcus பேக்டீரியா என்பது, Endocarditis என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோலத்தான் மேலும் பல வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பிரமாண பத்திரம் சுட்டிக்காட்டுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications