எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது.. காந்தியின் கூற்றுபடி நியாயம் கிடைக்கட்டும்.. அற்புதம்மாள்
சென்னை: எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்தார். அப்போது அவர் அங்கு மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.
உங்களுக்கோ.. பிரேமலதாவுக்கோ நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஸ்டாலின் பொளேர்!
பேரறிவாளனின் தாய்
இவர்களின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பான வழக்கின்போது தமிழக அரசே எழுவரின் விடுதலை குறித்து முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
ஆளுநர் நடவடிக்கை
இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைச்சரவை
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில் அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு நிரபராதி,விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே! 29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!#29YearsTooMuchGovernor என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
|
நியாயம்
"எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது" என்று சொன்ன காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளிலாவது அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும் என கூறியுள்ளார்.