தருமபுரமா? தர்மபுரியா? கன்ஃபியூசான நாராயணன் திருப்பதி! எங்க ஊர்ல ஏதுங்க ஆதினம்? கலாய்த்த திமுக எம்பி
சென்னை : தருமபுரம் ஆதீனம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் தருமபுரி ஆதீனம் என குறிப்பிட்டுள்ள நிலையில், நாராயணன் Sir, சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எந்த ஊருணு கூட தெரியாம பதிவிட கூடாது என திமுக எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பல்லக்கு தூக்கும் நிகச்சி
ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பல ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் மனிதனை மனிதனே சுமக்கும் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டுமென திரவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தடை செய்ய கோரிக்கை
அதே நேரத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. அதனை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்துள்ளதாகவும், பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடும் எதிர்ப்பு
இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் எனவும், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நல்ல முடிவெடுப்பார் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்நிலையில் முதல்வரை ஆதீனங்கள் சந்தித்த நிலையில், பட்டின பிரவேசத்துக்கு முதல்வர் வாய்மொழி உத்தரவு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாராயணன் திருப்பதி ட்விட்டர்
இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தருமபுரி ஆதீன பட்டினப்பிரவேச விவகாரத்தில் மீண்டும் தவறிழைக்கிறது தி மு க அரசு. சில களவாணி பயல்களின் கோரிக்கையை ஏற்று பல்லக்கு தூக்க தடைவிதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சில புறம்போக்குகள் இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக, பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரும்" என பதிவிட்டிருந்தார்.
Recommended Video

திமுக எம்.பி. கிண்டல்
தனது பதிவில் தருமபுரம் என்பதற்காக தர்மபுரி என நாராயணன் திருப்பதி பதிவிட்டிருந்தார். இதனை வைத்து அவரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமாரும் அவரை சீண்டியுள்ளார். நாரயணன் திருப்பதியின் பதிவை ரீ ட்வீட் செய்து, "இது என்ன எங்க ஊர் மக்களுக்கே தெரியாத🤔 தருமபுரி ஆதீன பட்டினப்பிரவேசம். நாராயணன் Sir, சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எந்த ஊருணு கூட தெரியாம பதிவிட கூடாது. அது தருமபுரம், தர்மபுரி இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications