கொரோனா பரவல் அதிகமான சென்னை தெருக்கள்!.. சல்லடை போட்டு நோய் கண்டறிய மாநகராட்சியின் புது திட்டம்!
சென்னை: சென்னையில் உள்ள தெருக்களில் 16 சதவீதம் தெருக்களில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். இதனால் தெருக்கள் வாரியாக புதிய திட்டத்துடன் சென்னை மாநகராட்சி களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் 70 சதவீத கேஸ்கள் சென்னை மண்டலத்தை சேர்ந்தவர்கள். அதில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இங்கு மொத்தம் தெருக்கள் 39,537 உள்ளன. இதில் 6,537 தெருக்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதாவது சென்னையில் உள்ள தெருக்களில் இது 16 சதவீதமாகும். 5,943 தெருக்களில்தான் அனைத்து ஆக்டிவ் கேஸ்களும் உள்ளன.

நோயாளிகள்
தண்டையார்பேட்டையில் மொத்தம் உள்ள 2,995 தெருக்களில் 870 தெருக்களில் 2,249 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அது போல் போல் 76 தெருக்களில் மட்டுமே 5 கேஸ்களுக்கு மேல் உள்ளது. இதுகுறித்து கொரோனா தடுப்பு அதிகாரி ஜே ராதாகிருஷ்ணன் கூறுகையில் கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நோயாளிகள்
தினந்தோறும் 90 முதல் 100 முகாம்களை ஏற்படுத்தி காய்ச்சல் இருக்கிறதா என கண்டறிகிறோம். இந்த தெருக்களில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்கிறோம். ராயபுரத்தில் 563 தெருக்களில் 3,344 நோயாளிகளும் திருவிக நகரில் 497 தெருக்களில் 1,925 நோயாளிகளும் கோடம்பாக்கத்தில் 373 தெருக்களில் 1,934 நோயாளிகளும் உள்ளனர்.

தனிமை
சனிக்கிழமை நிலவரப்படி 9,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க ஒவ்வொரு தெருக்களிலும் மைக்ரோ திட்டத்தை அமல்படுத்தவுள்ளோம். எங்கெல்லாம் கிளஸ்டர் பரவுதல் இருக்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு அந்த நபர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவோம்.

சிறப்பு குழு
அப்போதுதான் கொரோனா இல்லாத தெருக்களை ஒருங்கிணைப்பதற்கு இது உதவும். முன்பு இதை ஒரு ஏரியாவில் கடைப்பிடித்தோம். தற்போது தெருக்களில் கடைப்பிடிக்கிறோம். எடுத்துக்காட்டாக ஏரியாவாக பிரிக்கப்பட்ட சுனாமி காலனி தற்போது 5 தெருக்களாக பிரிக்கப்படும். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மண்டல சிறப்பு குழுவினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications