Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியதுள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் தமிழகத்தில் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில் ஆன்மிக கூட்டம், அரசியல் கூட்டம் உள்ளிட்ட பிற கூட்டங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் முக்கியமான விழாக்கள் பக்தர்கள் கூட்டமின்றி தான் நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை

இந்த நிலையில் வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழக பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. விநாயகர் சிலை ஊரவலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க கூடாது என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்புடையது அல்ல

ஏற்புடையது அல்ல

''கொரோனா சூழல் காரணமாக கட்டுப்பாடுகளை போடுவதற்கு தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவதாக அலைக்கு எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை இப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகசதுர்த்திக்கு அனுமதிக்க மாட்டேன் எனக் கூறுவது ஏற்புடையது கிடையாது. மகாராஷ்டிராவில் தமிழகத்தை விட கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அங்கு கட்டுப்பாட்டை போட்டு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை'' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

எம்.ஆர். காந்தி கோரிக்கை

எம்.ஆர். காந்தி கோரிக்கை

தமிழக அரசு தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகவும், இல்லாவிடில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்று அண்ணாமலையும், சில பாஜக தலைவர்களும் கூறியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

சேகர் பாபு விளக்கம்

சேகர் பாபு விளக்கம்

இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக கொரோனா காலத்தில் எந்த ஒரு பண்டிகைக்கும், விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும், சுற்றறிக்கை வாயிலாக கூறியுள்ளார். இந்த உத்தரவின்பேரிலேயே தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ''ஒரு சிலர் தடையை மீறி விநாயகர் சிலை நடத்த போவதாக செய்திகள் வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறாகும். தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ, ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சங்கர் ஜிவால் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+