இயக்குநர் கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கை.. 4 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகழஞ்சலி நிகழ்ச்சியில், இயக்குநர் கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கையை 4 ஆண்டுகளுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொண்டர்களோடு நெருங்கி பழகியவர். தொண்டர்களை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் நாளேடான முரசொலியில் தாம் எழுதும் கடிதங்கள் மூலம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டவர். முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதங்கள் மூலம் தொண்டனுடன் தனித்தனியே உரையாடுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியவர்.

’உடன்பிறப்பே’
உடன்பிறப்பே' என்று தொடங்கும் கருணாநிதியின் கடிதங்கள் கோபம், விமர்சனம், பாராட்டு, எதிர்ப்பு என எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிய வார்த்தைகளால் எழுதப்பட்டதாகும். அவரின் கடிதத்தை வாசிப்பதற்காகவே முரசொலியை திமுக தொண்டர்கள் வாங்கி படித்து வந்தனர். இந்நிலையில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

கருணாநிதியின் கடிதங்கள்
விருதுநகர் பட்டம்புதூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொள்கிறார். 1968ம் ஆண்டு முதல் 2018 வரையில், திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை படிப்பகத்தின் உரிமையாளர் கௌரா ராஜசேகரன் பதிப்பித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையடுத்து திரையுலகினர் சார்பாக கலைஞருக்கு புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கருணாநிதி மீதான அன்பை வெளிப்படுத்தினர். அந்த மேடையில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், கலைஞர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்களை புத்தகமாக வெளியிட வேண்டும். கருணாநிதியின் எழுத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.

நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் 1968 முதல் 2018 வரை தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் புத்தகமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயக்குநர் கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கை, 4 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த கரு.பழனியப்பன் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications