Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘சாமியோவ்’ இனி இல்லை! அறிவியல் வளந்துருச்சு! தண்டோரா இனி வேண்டாம்! அதிரடி காட்டிய இறையன்பு ஐஏஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கனமழை எச்சரிக்கை மற்றும் பிற அறிவிப்புகளுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்படும் போது அதனை சொல்பவர்கள் 'சாமியோவ்' என முடிக்கிறார்கள் என சர்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

பண்டைக் காலங்கள் முதல் அரசு அறிவிப்புகள் கனமழை எச்சரிக்கை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மக்களை எச்சரிப்பதற்காக தண்டோரா போடும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது.

தண்டோரா அல்லது பறை மூலம் சத்தமாக இசைத்து பின்னர் மக்களுக்கு சொல்ல வேண்டிய அறிவிப்புகளை ஊரகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஊரில் உள்ள தெருக்களில் முனைகளில் நின்று சத்தமாகச் சொல்லிவிட்டு செல்வார்கள்.

தண்டோரா

தண்டோரா

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளியில் திருடப்பட்ட பொருட்களை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் தற்போது காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கையானது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இப்போதும் தண்டோரா முறை மூலம் தான் இந்த தகவல்கள் வெளியாகின்றன.

தகவல் தொடர்பு சாதன வசதிகள்

தகவல் தொடர்பு சாதன வசதிகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளில் தண்டோரா மூலம் போட்டு அறிவிக்கின்ற முறைதான் வழக்கத்தில் இருக்கும் நிலையில் தகவல் தொடர்பு சாதன வசதிகள் பல்கிப் பெருகிவிட்ட இந்த காலத்தில் உலக நாடுகளுக்கு இணையாக போட்டி போடும் இந்தியாவில் இன்னும் தண்டோரா போடுகின்ற முறையானது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இன்னமும் கீழாநிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தண்டோரா அறிவிப்பு

தண்டோரா அறிவிப்பு

மேலும் தண்டோரா அறிவிப்பை சொல்லும் பணியாளர்கள் இறுதியில் 'சாமியோவ்' என்று சொல்வதும் நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு சொல்வது அந்த சமுதாயத்தினரை இழிவு படுத்துவது போல் இருக்கிறது என சர்ச்சை எழுந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இந்த முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

தண்டோரா போட தடை

தண்டோரா போட தடை

இந்த நிலையில் தான் தண்டோரா போடுவதை தடை செய்வது நல்லது என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் "மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் பல ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும் அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு வேதனைப்படுவதையும் கண்டேன் அறிவியல் வளர்ந்து விட்டது தொழில்நுட்பம் பெருகிவிட்டது.

இறையன்பு ஐஏஎஸ்

இறையன்பு ஐஏஎஸ்

இந்தச் சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டிய தேவையில்லை ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வளம் வரச் செய்வதன் மூலம் மூளை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும் எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது நீரில் ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் இச்செய்து ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமாறு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" என கூறியுள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+