கூட்டமாய், கொண்டாட்டங்களில் இறங்கி சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட சுய ஊரடங்கு!
சென்னை: கொரோனா என்கிற மிகப் பெரிய தொற்று நோயில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்காக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சுய ஊரடங்கை கடைபிடித்தனர். ஆனால் மாலை 5 மணிக்கு தேசத்தின் பல பகுதிகளில் அந்த சுய ஊரடங்கின் அவசியம் தவறான புரிதலால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போனது என்பதுதான் வேதனை.
Recommended Video
தற்போதைய நூற்றாண்டின் மிகப் பெரிய தொற்று நோயாக உலகை ஆட்டுவித்து வருகிறது கொரோனா. இதுவரை 14,000 மனித உயிர்களைக் குடித்திருக்கும் கொரோனா இன்னமும் அதி தீவிரமாக பரவி வருகிறது.
|
ஒருநாள் சுய ஊரடங்கு
உலகின் ஒவ்வொரு நாடும் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பகீரத முயற்சிகளை படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவின் கொட்டம் அடங்கியபாடில்லை. இதனால்தான் பிரதமர் மோடி, இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதனை ஏற்று ஒட்டுமொத்த தேசமும் காலை 7 மணி முதல் சுய ஊரடங்கில் தம்மை இணைத்துக் கொண்டது.
|
வீட்டுக்குள் முடங்கிய தேசம்
எப்போதும் வாகனங்கள் அலைபாயும் நெடுஞ்சாலைகள் காக்கை குருவிகளின் ஒருநாள் உல்லாச விடுதிகளாக உருமாறிப் போயின.. காதுகளை கிழித்துக் கொண்டு இரைந்து கொண்டிருந்த ரயில்களும் விமானங்களும் தங்களுக்கும் சுய ஓய்வை கொடுத்து ஊரடங்கில் இணைந்து கொண்டன. தேசத்தின் அத்தனை திசைகளுமே ஊரடங்கில் ஒன்றிப் போய் கிடந்தன. ஒட்டுமொத்த நாடும் பல மணிநேரம் மயான அமைதியாக தம்மை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டது.

மாடிகளில் கரவொலி
இதனையடுத்து பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைப் போல மாலை 5 மணிக்கு, கொரோனா தடுப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தியாகசீலர்களுக்கு நன்றியும் உற்சாகமும் தெரிவிக்க அவரவர் வீடுகளில் நின்று, மாடிகளில் நின்று கரவொலி எழுப்பும் நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆம் கரவொலிகள் வந்தன.. மாடிகளில் நின்று கைதட்டினார்கள்... பால் கனிகளில் நின்று பரவசத்துடன் கை தட்டினர்.. இதுவரை ஓ.கே.

பெருநகரங்களின் பேரவலம்
ஆனால், பல இடங்களில் குறிப்பாக வட இந்தியாவில் 5 மணிக்கு பெரும் கூட்டமாக தெருக்களில் கூடி இந்த நிகழ்வை ஒரு திருவிழா கூட்டமாக மாற்றிவிட்டனர். மக்களே ஒன்று கூடாதீர்! தொற்று நோய் பரவும்... ஆகையால் ஊரடங்காக உள்ளே இருங்கள் என்றுதான் பிரதமர் அழைத்தார்.. ஆனால் பிரதமருக்கு ஆதரவு தருகிறோம் என்கிற பெயரில் அவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் பெருநகரங்களில்தான் கூட்டமாக கூடிவிட்டனர். ஆனால் பெரும்பாலான சிறு நகரங்கள், குக்கிராமங்கள் எப்போதும் போல் அரசு அறிவித்த சுய ஊரடங்குக்கு கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக அமைதி காத்தார்கள்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications