கூட்டமாய், கொண்டாட்டங்களில் இறங்கி சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட சுய ஊரடங்கு!
சென்னை: கொரோனா என்கிற மிகப் பெரிய தொற்று நோயில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்காக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சுய ஊரடங்கை கடைபிடித்தனர். ஆனால் மாலை 5 மணிக்கு தேசத்தின் பல பகுதிகளில் அந்த சுய ஊரடங்கின் அவசியம் தவறான புரிதலால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போனது என்பதுதான் வேதனை.
Recommended Video
தற்போதைய நூற்றாண்டின் மிகப் பெரிய தொற்று நோயாக உலகை ஆட்டுவித்து வருகிறது கொரோனா. இதுவரை 14,000 மனித உயிர்களைக் குடித்திருக்கும் கொரோனா இன்னமும் அதி தீவிரமாக பரவி வருகிறது.
|
ஒருநாள் சுய ஊரடங்கு
உலகின் ஒவ்வொரு நாடும் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பகீரத முயற்சிகளை படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவின் கொட்டம் அடங்கியபாடில்லை. இதனால்தான் பிரதமர் மோடி, இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதனை ஏற்று ஒட்டுமொத்த தேசமும் காலை 7 மணி முதல் சுய ஊரடங்கில் தம்மை இணைத்துக் கொண்டது.
|
வீட்டுக்குள் முடங்கிய தேசம்
எப்போதும் வாகனங்கள் அலைபாயும் நெடுஞ்சாலைகள் காக்கை குருவிகளின் ஒருநாள் உல்லாச விடுதிகளாக உருமாறிப் போயின.. காதுகளை கிழித்துக் கொண்டு இரைந்து கொண்டிருந்த ரயில்களும் விமானங்களும் தங்களுக்கும் சுய ஓய்வை கொடுத்து ஊரடங்கில் இணைந்து கொண்டன. தேசத்தின் அத்தனை திசைகளுமே ஊரடங்கில் ஒன்றிப் போய் கிடந்தன. ஒட்டுமொத்த நாடும் பல மணிநேரம் மயான அமைதியாக தம்மை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டது.

மாடிகளில் கரவொலி
இதனையடுத்து பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைப் போல மாலை 5 மணிக்கு, கொரோனா தடுப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தியாகசீலர்களுக்கு நன்றியும் உற்சாகமும் தெரிவிக்க அவரவர் வீடுகளில் நின்று, மாடிகளில் நின்று கரவொலி எழுப்பும் நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆம் கரவொலிகள் வந்தன.. மாடிகளில் நின்று கைதட்டினார்கள்... பால் கனிகளில் நின்று பரவசத்துடன் கை தட்டினர்.. இதுவரை ஓ.கே.

பெருநகரங்களின் பேரவலம்
ஆனால், பல இடங்களில் குறிப்பாக வட இந்தியாவில் 5 மணிக்கு பெரும் கூட்டமாக தெருக்களில் கூடி இந்த நிகழ்வை ஒரு திருவிழா கூட்டமாக மாற்றிவிட்டனர். மக்களே ஒன்று கூடாதீர்! தொற்று நோய் பரவும்... ஆகையால் ஊரடங்காக உள்ளே இருங்கள் என்றுதான் பிரதமர் அழைத்தார்.. ஆனால் பிரதமருக்கு ஆதரவு தருகிறோம் என்கிற பெயரில் அவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் பெருநகரங்களில்தான் கூட்டமாக கூடிவிட்டனர். ஆனால் பெரும்பாலான சிறு நகரங்கள், குக்கிராமங்கள் எப்போதும் போல் அரசு அறிவித்த சுய ஊரடங்குக்கு கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக அமைதி காத்தார்கள்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications