தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 2.6 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே 4ம் தேதி முதல் 21ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் +2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள். சுகாதாரத் துறை வல்லுநர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், +2 வகுப்பு பொதுத்தேர்வு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனாோ பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications