கொரோனா லாக்டவுன் : தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்
முழு ஊரடங்கை யொட்டி சென்னையிலிருந்து இரண்டு நாளில் 4 ஆயிரத்து 575 அரசு பேருந்துகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 575 பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர்.
சென்னை: கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகர் சென்னையில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தலைநகர் சென்னையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனையடுத்து சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்தனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கார்கள், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தனர். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.
முழு லாக்டவுன் காலத்தில் தனியார் அலுவலகங்கள் இயங்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட 4,575 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 875 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டதால் தலைநகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications