சென்னையில் கன்டெய்ன்மென்ட் ஏரியாக்கள் எவை எவை.. வெளியானது முழு லிஸ்ட்
சென்னை: சென்னையில் நீங்கள் எந்த ஏரியாவில் வசிக்கிறீர்கள்.. உங்கள் தெரு கன்டெய்ன்மென்ட் ஜோனில் உள்ளதா என்பது குறித்து இதில் அறியலாம். ஏனெனில் சென்னை மாநகராட்சி சென்னையின் எந்தெந்த பகுதிகள் கன்டெய்ன்மென்ட்ஜோனில் வருகிறது என்பதை இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நேற்று மாலை நிலவரப்படி 2323 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 1258 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 1035 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள். இதில் சென்னையில் தான்அதிகம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
மக்கள் அடர்த்தி மிகுந்த சென்னை நகரம் என்பது வெறும் மாநகரம் என்பது மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் உள்ள ஊர் ஆகும். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் யாராவது ஒருவர் நிச்சயம் சென்னையில் இருப்பார். தமிழகத்தின் இதயமே சென்னை தான். அந்த ஊர் இப்போது கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொத்துக்கொத்தாக பரவி உள்ளது.

அச்சத்தில் மக்கள்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900த்தை தாண்டி உள்ளது. கடந்த மூன்று நாளில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரு நாளில்மட்டும் சென்னையில் 138 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்கிற அச்சம் அதிகரித்துள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகள்
இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதித்த பகுதிகளை தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவித்து கன்டெய்ன்மென்ட் ஜோனில் கொண்டுவந்துள்ளது. அப்படி ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் லிஸ்டை பொறுத்து பகுதிகளை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்து வருகிறது.

198 தெருக்கள்
அந்தவகையில் மே 1ம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் கண்டெய்ண்மெண்ட் ஜோன் எது எது என்பது குறித்து முழு லிஸ்டை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 198 தெருக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக உள்ளது.மிக அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்திலும், அதற்கு அடுத்தபடியாக திருவிகநகர் மண்டலத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்திலும் அதிகப்படியாக பகுதிகள் கொரோனா தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் கவனம் தேவை
இந்த லிஸ்டில் சில தெருக்களின் பெயர்கள் மட்டுமே உள்ளது, சிலவற்றில் எந்தஏரியா என்பதும் உள்ளது. அத்துடன் கண்டெய்ண்மெண்ட் ஜோனில் எந்த தேதி முதல் தெருக்கள் எல்லாம் வந்தன என்பதையும் தெரிவித்துள்ளது. கூகுளிலும் கண்டெய்ண்மெண்ட் ஜோன் எவை எவை என்பது காட்டுகிறது. எனவே மக்கள் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருப்பது நலம். கன்டெய்ன்மென்ட் முழு லிஸ்ட் கீழே உள்ளன.
சென்னையில் கன்டெய்ன்மென்ட் ஏரியாக்கள் எவை எவை.. வெளியானது முழு லிஸ்ட் #Chennai #Coronavirus pic.twitter.com/pRbjMkuL3H
— Oneindia Tamil (@thatsTamil) May 1, 2020
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications