ஓபிஎஸ் க்கு நியாயம் கேட்கும் முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள்! இன உணர்வுடன் திரளுமாறு போஸ்டர்கள்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் அணி திரளத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
மறவர் மகாஜன சபை, முக்குலத்தோர் உறவின் முறை என்ற பெயர்களில் தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி ராஜபாளையத்திலும், 3-ஆம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஓ.பி.எஸ்.க்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதிகாரச் சண்டை
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் அதிகாரச் சண்டை இருபெரும் சமுதாயத்துக்கு இடையே மனக்கசப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கடந்த வாரம் ''தேவரினமே விழித்துக்கொள்'' என்ற பெயரில் திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் முக்குலத்தோர் உறவின் முறை என்ற பெயரில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளிலும், மறவர் மகாஜன சபை என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி வரும் 30-ஆம் தேதி மற்றும் 3-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அந்த போஸ்டர்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள், மூக்கையா தேவர் ஆகியோர் படங்களுடன் ஜெயலலிதா படமும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

இன உணர்வு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நியாயம் கேட்டு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன உணர்வுடன் சமுதாயத்தினர் திரண்டு வர வேண்டும் என மறவர் மகாஜன சபையும், முக்குலத்தோர் உறவின் முறை அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளது. தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் இது போன்ற போஸ்டர்களால் அதிமுகவில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. குறிப்பாக அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

துரோகம் உதயகுமார்
தேவர் சமுதாயத்தில் பிறந்து தேவர் சமுதாயத்திற்கே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துரோகம் செய்துவிட்டதாக கணேசத் தேவர் என்பவர் கடந்த வாரம் கடுமையான முறையில் போஸ்டர் ஒன்று ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இரு தனி நபர்களுக்கு இடையேயான ஈகோவால் இரு பெரும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கசப்புணர்வு அதிகரித்து வருகிறது.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications