ஸ்டாலின் டீ குடிக்கச் சொன்னார்! துரைமுருகன் அன்பாக பேசினார்! சிரித்த முகத்துடன் வந்த K.s.அழகிரி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தன்னிடம் அன்பாக பேசியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் குடிக்க கூறியதாகவும் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் திமுகவுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுதது இங்கு கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.

திமுக பரிசீலனை
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை திமுக தலைமையிடம் எடுத்துக் கூறியிருப்பதாகவும் தாங்கள் கேட்டுள்ள இடங்களை பரிசீலிப்பதாக திமுக கூறியதாகவும் சிரித்த முகத்துடன் பேட்டியளித்தார் கே.எஸ்.அழகிரி. இந்தப் பேச்சுவார்த்தைக்கும் காங்கிரஸ் மேலிட தலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முழுக்க முழுக்க மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிப்போம் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சுமுக பேச்சுவார்த்தை
பல இடங்களில் இடப்பங்கீடு தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், மேயர், நகர்மன்ற தலைவர் பதவியிடங்கள் குறித்து தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி கூறினார். முதலமைச்சர் தங்களிடம் அதிகம் பேசுவதில்லை என நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கே.எஸ்.அழகிரி குறைபட்டுக் கொண்ட நிலையில், இன்று முதலமைச்சர் தன்னை தேநீர் குடிக்கச் சொன்னதாகவும் துரைமுருகன் அன்பாக தன்னிடம் பேசியதாகவும் கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

எழுந்து நின்று
இதேபோல் பேச்சுவார்த்தைக்கு சென்ற தன்னை பேச்சுவார்த்தை குழுவினர் எழுந்து நின்று வரவேற்றதாகவும் சிரித்த முகத்துடன் கூறினார் கே.எஸ்.அழகிரி. உள்ளே போன தங்களுக்கு தேனீர் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும், தேனீர் குடித்தபடியே பேச்சுவார்த்தை நடத்தினோம், துரைமுருகன் அன்பாக பேசினார் என்றும் அழகிரி தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவிடன் 25 இடங்களை பெறுவதற்குள் பல முறை தண்ணீர் குடித்த கே.எஸ்.அழகிரி, இந்த முறை சுமூகமான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதால் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில். சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது அழகிரி கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
-
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications