Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டங்க் ஸ்லிப்” ஆச்சு.. பாஜகவில் 4 நடிகைகள் ”ஐயம்” என்றே சொல்ல வந்தேன்! மழுப்பிய திமுக சைதை சாதிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவில் 4 நடிகைகள் குறித்து இரட்டை அர்த்தத்தில் தவறான வார்த்தையில் பேசியதாக திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஐயம் என்று சொல்வதற்கு பதில் வாய் தவறி அதுபோல் பேசிவிட்டதாக கூறி இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகளை இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஆங்கில வார்த்தை

ஆங்கில வார்த்தை

அவர் பேசியதாவது, "பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை நடிகைகள் குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி 4 பேருமே ****." என்று அவர்களை குறிப்பிட்டு ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார். குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்வதாக சாதிக் ஒருமையில் பேசினார்.

இரட்டை அர்த்த பேச்சு

இரட்டை அர்த்த பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும் விமர்சித்து பேசிய அவர், குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தம் தரும் வகையில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சைதை சாதிக்கின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

குஷ்பு கண்டனம்

குஷ்பு கண்டனம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களிடம், அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலை பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?" என கேள்வி எழுப்பினார்.

கனிமொழி மன்னிப்பு

கனிமொழி மன்னிப்பு

இதற்கு பதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேசப்பட்ட இடம், அவரது கட்சி எதுவாக இருந்தாலும் இந்த பேச்சை ஏற்க முடியாது. முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் திமுகவால் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது." என்றார்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் புகாரளித்து இருக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புகாரளித்துள்ளனர்.

சைதை சாதிக் மழுப்பல்

சைதை சாதிக் மழுப்பல்

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், "4 நடிகைகளை வைத்து பாஜக கட்சி நடத்துகிறது. எங்களுக்கு என்ன ஐயம் என்றால், என்றே நான் பேச வந்தேன். அது மாறிவிட்டது." என்று கூற நெறியாளர், நீங்கள் சொல்வது அந்த ஃப்ளோவில் இல்லை என்று சொன்னார். உடனே சைதை சாதிக், "ஐயம் என்றுதான் சொல்ல வந்தேன்." என்றே பதிலளித்தார். நெறியாளர் பார்ப்பவர்கள் முட்டாளா என்று கேட்க, அதற்கு நான் என்ன செய்வது." என்று பதிலளித்தா சாதிக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+