துரைமுருகனை கவனித்தீர்களா! டேப்லெட்டை ஓரம் கட்டிவிட்டு என்ன செய்தார் தெரியுமா? சட்டசபை ருசிகரம்!
சென்னை: தமிழக சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் கெத்து காட்டிய நிகழ்வு நடந்துள்ளது.
ஆளுநர் உரையின் போது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சீரியஸாக டேப்லெட்டில் அவரது உரையை வாசித்துக் கொண்டிருக்க, அமைச்சர் துரைமுருகனோ தனக்கு கொடுக்கப்பட்ட டேப்லேட்டை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு நமக்கென்னவென்று அமர்ந்திருந்தார்.
இதனிடையே முதலில் டேப்லெட்டை கையில் எடுத்து அதை ஆன் செய்ய முயன்ற துரைமுருகன், பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதை அப்படியே ஓரமாக போட்டுவிட்டார்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு வாழ்க என கோஷம் எழுப்பியதோடு வெளிநடப்பும் செய்தனர். இவர்களை அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் சமாதானப் படுத்துவர என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைலண்டக அமர்ந்து ஆளுநருக்கு எதிரான முழக்கத்தை ரசித்தார்.

டேப்லெட்
இதையடுத்து ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மிக சீரியஸாக தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த டேப்லெட் சாதனத்தை ஆன் செய்து ஆளுநர் உரையை படித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மூத்த அமைச்சர் துரைமுருகனோ டேல்லெட்டை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஆளுநரை பார்ப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்ப்பதுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

உடல்மொழி
மேலும், தனது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு டேப்லெட்டில் ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டிருந்த போது, அதிலென்ன தெரிகிறது என்பது போல் ஒரு ரியாக்ஷனை வெளிப்படுத்தி அவரை மேலும் கீழுமாக பார்த்து வழக்கம் போல் தனது உடல்மொழியால் கெத்துகாட்டினார் துரைமுருகன். சட்டசபை கூட்டத் தொடர் லைவ் செய்யபடுகிறது என்பதை அறிந்தும் எப்போதும் போல் தனது வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

ஓரமாக வைத்துவிட்டு
இதனிடையே முதலில் டேப்லெட்டை கையில் எடுத்து அதை ஆன் செய்ய முயன்ற துரைமுருகன், பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதை அப்படியே ஓரமாக போட்டுவிட்டார். காகிதமில்லா சட்டசபை என்ற முயற்சியின் கீழ் புத்தகங்களுக்கு பதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டேப்லெட்டில் ஆளுநர் உரை கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications