"வைகோ"வை விடுங்க.. அந்த "பட்டாபிஷேகம்".. என்னது வாரிசு அரசியலா?.. துரை வையாபுரி என்ன சொல்றார் பாருங்க
துரை வைகோ செய்தியாளர்களிடம் பேட்டி தரும்போது, வாரிசு அரசியல் குறித்து கூறியுள்ளார்
சென்னை: மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியுமே தவிர, வாரிசு அரசியல் என்பதால் அல்ல... வாரிசு அரசியல் என்பதை நானும் ஏற்கவில்லை என்று துரை வைகோ கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, இதுகுறித்த விவாதங்களும் இணையத்தில் வெடித்து கிளம்பி வருகின்றன.
மகனுக்கு பட்டாபிஷேகம் என்ற வார்த்தையை, பெரும்பாலும் பயன்படுத்தி வந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான்.. கருணாநிதியிடம் எவ்வளவு நெருக்கமாக இருந்தாரோ, அடுத்த சில வருடங்களிலேயே அதேஅளவு அதிருப்தியையும் கொண்டிருந்தார் வைகோ.
"கருணாநிதி தன் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த ஆசைப்படுகிறார்.. திமுகவை குடும்ப கட்சியாக்கிவிட்டார்" என்று வெளிப்படையாகவே முன்பு பேசினார் வைகோ.

கர்ஜனை
மதிமுக என்ற கட்சி உருவானதே, வாரிசு அரசியல் என்ற விவகாரத்தின் வெடிப்பில் இருந்துதான் என்பதை தமிழகம் அறியும்.. இதற்கு பிறகு வைகோ என்ற ஆளுமை, இளைஞர்களை கட்டிப்போட்டது.. கர்ஜனை பேச்சையும், போராட்ட குணத்தையும் பார்த்து, எத்தனையோ பேர் சிலிர்த்து போனார்கள்.. உயிர்தியாகங்களும் அரங்கேறின.. நடைபயணம் என்றாலே அது என்று வரலாறு சொல்லும் அளவுக்கு வீறுநடைகளை, தன் நடைபயணங்களில் பதிவு செய்தவர் வைகோ.. ஆனாலும், மதிமுக என்ற கட்சி, திமுகவை மிஞ்சி செல்லவில்லை. மீண்டும் திமுகவிலேயே மதிமுக ஐக்கியம் ஆனது..

வையாபுரி
யாரை எதிர்த்து வெளியே வந்தாரோ, அதே கருணாநிதியுடன் இணைந்தார் வைகோ.. யாரை காரணம் காட்டி மதிமுகவை துவங்கினாரோ, அதே ஸ்டாலினிடம் எம்பி பதவியையும் பெற்றார்.. எதற்காக வெளியே வந்தாரோ, அதே வாரிசு அரசியலை, வைகோவும் தற்போது கையில் எடுத்துவிட்டார்.. தனது மகன் துரை வைகோவை கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக கொண்டு வந்த போது, இங்கேயும் வாரிசு அரசியலா என்று எதிர்ப்பு தெரிவித்த மூத்த நிர்வாகிகள் சிலர் மதிமுகவை விட்டு வெளியேறினர். இப்போதுவரை இந்த விமர்சனம் மதிமுக மீது இருக்கத்தான் செய்கிறது..

இருங்க வரேன்
குறிப்பாக, கடந்த 6 மாத காலமாகவே, துரை வைகோவின் எழுச்சியும் அரசியலும் பேசப்பட்டும் வரும்சூழலில், மீண்டும் வாரிசு அரசியல் என்ற பேச்சு திமுகவில் உதயநிதி மூலம் ஒலிக்க தொடங்கி உள்ளது. 2 நாளைக்கு முன்பு, உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு, நேரடியாகவே சென்று உதயநிதிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தார் துரை வைகோ.. பிறகு ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.. அந்த அறிக்கையில், "தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திமுக இளைஞர் அணிச் செயலாளர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்" என்று பிரத்யேகமாக குறிப்பிட்டிருந்தார் துரை வைகோ..

துரை வைகோ
நேற்றைய தினமும் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டி இதுதான்: "ஆளுநர் பதவி தேவையில்லை அது ஒழிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். ஆன்லைன் அவசர சட்ட மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்துவதன் காரணமாக தமிழகத்தில் வாரம் இரண்டு பேர் உயிரிழந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

ஈர்ப்பு சிறப்பு
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்க செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. அதனால் அவர் அமைச்சர் ஆவதற்கு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரவேற்கக் கூடியது... மற்றபடி வாரிசு அரசியல் என்பதை நானும் ஏற்கவில்லை. மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியும்.. திமுகவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய காட்சிகளும் இணைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு ஆளானவரே, வாரிசு அரசியல் குறித்து கூறிய கருத்து தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதுகுறித்த விவாதங்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கி உள்ளன.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications