Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாட்கள் ஆலோசனைக்கு பின்னர்.. சேலத்திலிருந்து சென்னை பயணிக்கும் இபிஎஸ்.. இன்று முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்திலிருந்து சென்னைக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    3 நாட்கள் ஆலோசனைக்கு பின்னர்.. சேலத்திலிருந்து சென்னை பயணிக்கும் இபிஎஸ்.. இன்று முக்கிய முடிவு?

    அதிமுகவை சசிகலா தலைமையேற்று நடத்த வேண்டும் என கலகக் குரல் கட்சியில் எழுந்துள்ளது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக படுதோல்வி அடைந்தது.

    முதல் மூன்று தேர்தல் தோல்விகளுக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி என கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் நகர்ப்புற தேர்தலில் பழி போடுவதற்கு யாருமில்லாமல் போய்விட்டனர். காரணம் அதிமுக தனித்தே போட்டியிட்டது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பர் என அதிமுகவினர் நம்பினர்.

    கட்சி வளர்ச்சி

    கட்சி வளர்ச்சி

    ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சியை ஓபிஎஸ்- இபிஎஸ்ஸும் கெடுத்துவிட்டதாகவும் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வகிக்க வேண்டும் என்றும் அது சசிகலாவாக இருக்க வேண்டும் என சில தொண்டர்கள் தங்கள் விருப்பத்கை வெளிப்படுத்தினர். கிருஷ்ணகிரியில் சசிகலாவை ஆதரித்தும் ஓபிஎஸ்- இபிஎஸ்ஸுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    சசிகலா தலைமையேற்க வேண்டும்

    சசிகலா தலைமையேற்க வேண்டும்


    இந்த நிலையில் தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலா தலைமையேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இது ஓபிஎஸ் முன்பு நடத்தப்பட்ட தீர்மானம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சி அடைந்தது. அன்று மறுநாள் முதல் சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை. தங்கமணி உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வந்தார்.

    3 மணி நேரம் ஆலோசனை

    3 மணி நேரம் ஆலோசனை

    இதே போல் அடுத்த நாளும் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன், பாண்டியன், மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

    சேலம் டூ சென்னை

    சேலம் டூ சென்னை

    இந்த நிலையில் இன்று காலை அவர் சேலத்திலிருந்து சென்னைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அவர் இன்று சென்னையில் முக்கிய முடிவை அறிவிப்பார் என தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தது, அவரது கைது எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது எல்லாம் ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது. சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா நேரில் சந்தித்த விவகாரத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்க ஓபிஎஸ் கையெழுத்திட்டிருந்தாலும் இன்று ஏதோ முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுகிறார் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடைபெறவிருந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+