Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாம், இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் திருவிக நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

Edappadi Palaniswami Allots Seat to Armstrong Wife Porkodi

முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான நட்சத்திர வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சூழலில், இரண்டாம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் 46 சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் 17 பெண் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 150 பேரில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று மூன்றாம், இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் திருவிக நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார். சென்னையில் 12 தொகுதிகள் உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்குப் பிறகு, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநிலத் தலைவர் ஆனந்தன் என்பவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஏப்ரல் 2025-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, இவரைப் பொறுப்பிலிருந்து நீக்கி இருந்தர். தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 5, 2025 அன்று, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' (Tamil Maanila Bahujan Samaj) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

தற்போது தனது புதிய கட்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், தனது கணவரின் படுகொலைக்கு நீதி கோரியும் பொதுவாழ்வில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் தான் இன்று அவருக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+