கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்.. தேர்தல் நடத்தை விதிமுறை சொல்வது இதுதான்! மக்களே கவனம்
சென்னை: தமிழகத்துக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பிறகு மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் பொதுமக்கள் கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடைமுறை முழுமையாக முடியும் வரை அமலில் இருக்கும். தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தான் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றனர். இந்த காலக்கட்டத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் பறக்கும் படையாக செயல்படுவார்கள்.
ரூ.50 ஆயிரம் தான் 'லிமிட்'
தேர்தலில் முறைகேடு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் சோதனையை மேற்கொள்வார்கள். இந்த நடத்தை விதிமுறை காலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக அதிகளவில் பணம் எடுத்து செல்லக்கூடாது. அதன்படி ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் தேவையில்லை. மாறாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் கையில் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.
ரூ.10 லட்சம் சிக்கினால்..
இதனால் பொதுமக்கள் கையில் அதிகளவில் பணம் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்குவார்கள். அதேபோல் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பரிசு பொருட்கள் எடுத்து செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
ரூ.10,000-க்கு மேலான பொருட்கள்
இல்லாவிட்டால் அந்த பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதலாக வாய்ப்புள்ளது. அதன்படி ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசு பொருட்கள் உள்பட பிற பொருட்களை எடுத்து சென்றால் அது பறிமுதல் செய்யப்படும். இந்த பணம் - பொருட்கள் அரசியல் கட்சி, வேட்பாளர்களுடன் தொடர்பில்லாமல் இருக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்கள், உரிய விளக்கம் கொடுத்தால் மீண்டும் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் கருவூலத்தில் வழங்கப்படும்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications