Exit Poll 2021: எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்த தென்தமிழகம்.. இனி திமுகவசம்?
சென்னை: தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் திமுக கடந்த தேர்தலை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமையும் என ஆங்கில, தமிழக சேனல்களின் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. அந்த வகையில் ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில் தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் திமுக 33 முதல் 35 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும் போது திமுகவின் வெற்றி வாய்ப்புகள் பல்வேறு மண்டலங்களில் அதிகரித்துள்ளது.

58 தொகுதிகள்
தென் மாவட்டங்கள் என வரும் போது சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை ஆகும். இதில் மொத்தம் 58 தொகுதிகள் உள்ளன. எந்த கட்சியாக இருந்தாலும் தமிழக மக்கள்தொகையில் பெருமளவு தென் மண்டலம் என்பதால் அங்கு அதிக தொகுதிகளில் வெல்வதை விரும்பும்.

அமைச்சர் பதவி
அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தென் தமிழகம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே இருந்தது. அது போல் முக்கியமான மண்டலம் என்பதால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி என்பது நிச்சயமாக கொடுக்கப்படும்.

பெரும்பகுதி
அப்படிப்பட்ட தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் திமுக 33 முதல் 35 இடங்களையும் அதிமுக 21 முதல் 23 இடங்களையும் கைப்பற்றும் என கணிப்புகள் கூறுகின்றன. அதாவது இத்தனை நாள் அதிமுகவின் கோட்டையாக இருந்த தென் தமிழகம் தற்போது பெரும்பகுதி திமுக வசம் செல்ல போகிறது.

எத்தனை இடங்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்த தென்தமிழகத்தில் அதிமுக கூட்டணி 32 இடங்களிலும் திமுக கூட்டணி 26 இடங்களிலும் வென்றது. 2016 ஐ காட்டிலும் 2021 இல் தென் தமிழகத்தில் கூடுதல் தொகுதிகளை திமுக பிடிக்கும் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் இரு நாட்கள்தானே பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications