Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் அதிருப்தி.. கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதில் சிக்கல்.. நிலம் தரமாட்டோம் என மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசாங்கத்துக்கு நிலம் தரமாட்டோம் என அகழாய்வுக்கு இடம் கொடுத்தவர்கள் எதிர்ப்பு.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம அமைக்க தமிழக அரசு திட்டமிருக்கிறது. அதறகான முதற்கட்ட வேலைகள் தொடங்கி நடந்துவருகிறது. அகழாய்வு நடத்த இடம் கொடுத்த விவசாயிகள் அருங்காட்சியகம் அமைக்க அரசுக்கு அந்த இடங்களைக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

வைகை நதிக்கரையில் நடத்தப்பட்ட அகழாய்வில், கிழடி அருகே மிகப்பெரிய நகர நாகரிகம் இருந்ததை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். அதன்பிறகு கீழடியில் பல மாற்றங்கள் நடந்து, அகழாய்வு பணிகள் தொடர்வதில் சிக்கல் எழுந்தது. அகழாய்வைத் தொடர்ந்த அமர்நாத் அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.

15 ஆயிரம்

15 ஆயிரம்

அதன்பிறகு கீழடிக்காக தமிழ் சமூகம் தொடர்ந்து குரல் கொடுத்தது. தமிழக அரசு கீழடியில் அகழாய்வுப்பணிகளை எடுத்து நடத்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக கீழடியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாகரிகம்

நாகரிகம்

தமிழர் நாகரிகம் நகர நாகரிகம் என்பது கீழடியால் உறுதியானது. கீழடியில் கிடைத்த பொருட்களை கார்பன் பகுப்பாய்வு செய்தபோது, அதன் காலம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இதனால் கீழடியைப் பாதுகாக்க தமிழ் அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டின.
இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதையடுத்து தமிழகத்தில் பல புதிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரடியாகவே பார்வையிட்டு வருகிறார்.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியமாக அமைக்கப்படும். மக்கள் எப்பொழுதும் வேண்டுமானாலும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் அதற்கான இடம் இன்னும் அரசின் கைகளுக்குக் கிடைக்கவில்லை.
கீழடியில் அகழ்வாய்வு செய்ததும், அந்த‌ இடங்களை சரிசெய்து விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள் விவசாயிகள் மறுபடியும் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். இதுவரை இப்படித்தான் நடந்தது. தற்போது 7ம் கட்ட அகழாய்வுக்கு நிலத்தை கொடுத்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

விவசாயிகள் கூறுகையில், ''நிலத்தை வாங்கி மீண்டும் தருவதாக கூறி தான் எங்கள் நிலத்தை வாங்கினார்கள். ஆனால் தற்போது அது திறந்தவெளி அருங்காட்சியகமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இங்கு தென்னை மரங்கள் இருக்கிறது. அதை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரமே இருக்கிறது. எங்கள் நிலத்தை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிப்பதில் எங்களுக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. மேலும் எட்டாம் கட்ட அகழாய்வுக்கு எங்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு நிலமும் தரப்படாது'' என கீழடியில் அகழாய்வுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+