'பயம்மா இருக்கும்மா'.. நீட் தேர்வு தோல்வி பீதி.. தீக்குளித்த மாணவி அனு உயிரிழப்பு.. சென்னை ஷாக்
29 நாட்கள் சிகிச்சை பலனின்றி மாணவி அனு உயிரிழந்தார்
சென்னை: நீட் தேர்வு பயத்தால் தீக்குளித்த சென்னை மாணவி 29 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது... சுமார் 16 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க இந்த தேர்வை எழுதினார்கள். நம் மாநிலத்திலும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்..
ஆனால், தேர்வு பயம் காரணமாக இதில் ஒருசிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. அப்படி ஒரு மாணவிதான் அனு..

செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் கமல்தாஸ்.. இவர் ஒரு ஆசிரியர்.. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.. மனைவி பெயர் ஷீபா... இவரும் டீச்சர்.. கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரே மகள் அனு.. 17 வயதாகிறது.

பெற்றோர்
சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்... சின்ன வயதில் இருந்தே அனுவுக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை அதிகமாக இருந்தது.. அதனால், கடந்த மாதம் 12-ந்தேதி நீட் தேர்வு எழுதினார்...தேர்வுக்கு பிறகு பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று கலங்கி சொல்லி உள்ளார்.. மேலும், பாஸ் ஆகிவிடுவேனா? பயமா இருக்கு? ரிசல்ட் எப்படி வருமோ தெரியலையே? பயமா இருக்கும்மா" என்று பெற்றோரிடம் புலம்பி கொண்டே இருந்துள்ளார்.

அதிருப்தி
தேர்வு எழுதி 3 நாள் ஆகியும் மனசோர்வுடனும், வருத்தத்துடனும் இருந்துள்ளார்.. சரியாக சாப்பிடவுமில்லை.. இந்நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி அனுவின் பெற்றோர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டனர்... அனு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்... அப்போது நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அனு தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, அனுவை மீட்டுக் கொண்டு போய் வந்தனர்.

உயிரிழப்பு
அப்போதே 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டது.. முதலில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்... பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுவை அனுமதித்தனர்.. அங்கு இத்தனை நாளும் தீவிரமாக சிகிச்சை நடந்து வந்தது.. 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி அனு நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications