நான் “சீனியர்”.. சீனுக்கு வந்த முன்னாள் சபாநாயகர்! ஜெ சொன்ன “100 ஆண்டு” - லிஸ்டு போட்ட தனபால்
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51 வது ஆண்டு தொடங்கும் நிலையில் வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுகவில் தான் இணைந்தது தொடங்கி வகித்த பதவிகள் வரை அனைத்தையும் பட்டியலிட்டு இருக்கிறார்.
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் சபாநாயகர் தனபாலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51வது ஆண்டு தொடங்குவதை அடுத்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் விழாவிற்கு நடைபெற்றது.

பொன்விழா
காலை 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமைக் அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

அதிமுக கொண்டாட்டம்
இதனை முன்னிட்டு, அதிமுகவின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிளை, வார்டு, வட்ட அளவில் உள்ள அதிமுக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

தனபால் ட்வீட்
இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "அதிமுக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கபட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று பொன் விழாவை நிறைவு செய்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, அதன் ஆரம்ப கால உறுப்பினர் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜெயலலிதா சொன்னது
இப்படிப்பட்ட பிரம்மாண்டமான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அமைச்சராகவும், பேரவை துணை தலைவராகவும், அதிக காலம் பேரவைத் தலைவராகவும் பணியாற்றியதையும், தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருவதையும் என் வாழ்நாளில் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக கருதுகிறேன். அம்மா அவர்கள் சட்டமன்றத்திலே சூழுரைத்தது போல இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டு காலம் இருந்து, ஆட்சி செய்து, மக்களுக்கு சேவை அளிக்கும்." என்றார்.
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!











Click it and Unblock the Notifications