பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு - மீண்டும் சதமடிக்கப் போவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் 1லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 58 பைசாவிற்கு விற்பனையாகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 58 பைசாவிற்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து 94 ரூபாய்74 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனையான நிலையில் தமிழக பட்ஜெட்டில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பால், சற்றே ஆறுதல் அடைந்திருந்த நிலையில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவதால் மீண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை எட்டப்போகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 58 பைசாவிற்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து 94 ரூபாய்74 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விலையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications