அதிரடி! கோகுல்ராஜ் கொலை வழக்கில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசிட்..ஏன்?
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ‛ஸ்பாட் விசிட்' செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேரடியாக நீதிபதிகள் களமிறங்கும் நிலையில் பரபரப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். இவரும் சுவாதி என்பவரும் காதலித்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கடந்த 2015ல் ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு கோகுல் ராஜ், சுவாதி மற்றும் சுவாதியின் தோழி ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது கோகுல்ராஜ் கோவிலில் இருந்து கடத்தி கொலை செய்யப்பட்டார். கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாளம் அருகே அவரது உடல் கிடந்தது.

10 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

பிறழ் சாட்சியாக சுவாதி
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது சுவாதி ஆஜரானார். பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, ‛‛புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்'' என நீதிபதிகள் கூறினர். இருப்பினும் சுவாதி சரியாக பதில் அளிக்கவில்லை. பெரும்பலான கேள்விகளுக்கு தெரியாது என அவர் கூறினார்.

குற்றச்சாட்டு பதிவு
மேலும் சிசிடிவி உள்ள பெண் அவராக இருந்தும் கூட அதனை சுவாதி மறுத்தார். இது புது தலைவலியை ஏற்படுத்தியது. உண்மையை சொல்ல சுவாதி மறுப்பதாக நீதிமன்றம் கருதியது. மேலும் சுவாதி மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவிலுக்கு செல்லும் நீதிபதிகள்
மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்தனர். அதன்படி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். கோவில் உள்ளே வரும் வழி, வெளியே வரும் வழி பற்றி புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் இந்த முடிவை நீதிபதிகள் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ல் நீதிபதிகள் நேரில் சென்று பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிபதிகள் பெரும்பாலும் வழக்கு தொடர்பான ஸ்பாட் விசிட் செய்யமாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் நீதிபதிகள் நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளனர். இது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications