காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு! ஆங்கிலேயர்கள் தான் அதை சிதைத்தார்கள்! ஆளுநர் ரவி பேச்சு!
சென்னை: காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு இருந்ததாகவும் அதனை ஆங்கிலேயர்கள் தான் சிதைத்தார்கள் எனவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியர்களிடம் இருந்த ஆன்மிக ஒற்றுமையையும் ஆங்கிலேயர்கள் தான் சிதைத்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

கலாச்சார நிகழ்வு
சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் பவன்ஸ் 2022 கலாச்சார விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ரவி சாதனையாளர்களும் விருதும் பரிசும் வழங்கினார். இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பவன்ஸ் விருதையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் இந்திய கலச்சார வரலாறு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஆங்கிலேயர்கள் சிதைத்தார்கள்
மேலும், கடந்த 1930 களில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ரீதியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிதைத்ததாக ஆளுநர் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியர்களிடம் இருந்த கலாச்சார, ஆன்மிக ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் தான் சிதைத்தார்கள் எனவும் கூறியிருக்கிறார். ஆளுநரின் இந்தக் குற்றச்சட்டு அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆளுநர் விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெற்று நூற்றாண்டை நெருங்கி வரும் நிலையில் ஆளுநர் ஆங்கிலேயர்களை விமர்சித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆளுநர் ரவி பங்கேற்ற பவன்ஸ் 2022 கலாச்சார விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அரசியல் கட்சிகள்
அண்மைக்காலமாக ஆளுநர் ரவியின் பேச்சுக்களை திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிப்பதோடு பதிலடியும் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு இருந்ததாக ஆளுநர் கூறியிருப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்குமா என்பது தெரியவில்லை.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications