ராஜராஜ சோழன் ஆட்சியால் தமிழகத்தில் ஆன்மீக எழுச்சி.. ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்தை கவனித்தீர்களா!
சென்னை: பேரரசர் ராஜராஜ சோழனின் ஆட்சிகாலத்தில்தான் தமிழ்நாடு ஆன்மீக மற்றும் பண்பாட்டு எழுச்சி பெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர் பெரியக் கோவிலை கட்டி எழுப்பிய சோழ பேரரசர் ராஜராஜ சோழன் எனப்படும் அருண்மொழி வர்மனின் பிறந்தநாள் விழா சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ராஜராஜ சோழனின் சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்.என்.ரவி வாழ்த்து
ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது போர்த்திறன், கட்டிடக்கலை, ஆட்சி முறை ஆகியவற்றை போற்றிப் புகழ்ந்து பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ட்விட்டரில் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ராஜராஜ சோழனின் நிர்வாகத்திறன்
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பதிவில், "பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் ஆன்மீக எழுச்சி
மேலும், அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் நினைவு கூர்ந்தார்." என்று பதிவிடப்பட்டு உள்ளது. இப்பதிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சருக்கும் டேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகம் என்ற வார்த்தை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழன் பிறந்தநாள்
உலகின் மிகப்பெரும் பேரரசாக திகழ்ந்த, தஞ்சாவூர் முதல் மலேசியா, இந்தோனேசியா வரை தன்னுடைய ஆட்சியை பிடித்த சோழ பேரரசின், தவிர்க்க முடியாத முக்கிய மன்னனாக இருப்பவர் ராஜராஜ சோழன். தஞ்சை பெரிய கோயிலை கட்டி தமிழர்களின் கட்டிடக் கலையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ராஜராஜ சோழன். தஞ்சாவூரை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

விழாக்கோலம்
ஆண்டு தோறும் அவரது பிறந்த தினம் அரசு சார்பாக சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்கள் நடைபெறும் 1037 ஆம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் இன்று தொடங்கியது. இதனால் தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. தொடர்ந்து ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது.

ராஜராஜ சோழன் சிலை
சதய விழாவை ஒட்டி ராஜராஜ சோழன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இராஜராஜனின் குருவான கருவூர் சித்தர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

அரசு விடுமுறை
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். சதயவிழாவை ஒட்டி நாளை தஞ்சைக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications