தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு:
தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
அடுத்த 48 மணிநேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். அடுத்த 72 மணிநேரத்தில் கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
நத்தத்தில் நங்கூரமிட்டுள்ள நத்தம் விஸ்வநாதன்... பணமழை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர்..!
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக் கூடும். அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன்ன் காணப்ப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.