144 தடை உத்தரவு, தமிழகமே லாக் டவுன்: சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்படும் என்பதால் இன்றைய தினமே சொந்த ஊர்களுக்கு கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துவிட்டது.
இதையடுத்து கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுக்க நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நீட்டிப்பு
தமிழகத்தில் இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களை அதாவது கொரோனா பாதித்த மாவட்டங்களின் எல்லைகளை மூடுமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த மாநிலங்களில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை மூட பரிந்துரை செய்யப்பட்டது.

எல்லைகள்
இதையடுத்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்தில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது.

காய்கறிகள்
அதாவது தமிழகமே லாக் டவுன் ஆகும் சூழல் நிலவியுள்ளது. அந்த காலகட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, மளிகைக் கடை உள்ளிட்ட கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்ட போதும் மக்கள் காய்கறிகளை வாங்க குவிந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது காய்கறி விலை உயர்ந்து விட்டால் என்ன செய்வது, அதனால்தான் ஒரு வாரத்திற்கான காய்கறிகளை வாங்கி வருகிறோம் என தெரிவித்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையம்
இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறையை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் போட்டி போட்டு கொண்டு பேருந்துகளை பிடித்து வருகிறார்கள். இன்று காலை முதல் இருவர் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் தற்போதைய லாக் டவுன் சூழலால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பியுள்ளது.

நாளை மாலை வரை பேருந்து இயக்க அனுமதி
ஒவ்வொருவரும் பேருந்துக்கு செல்வதற்கு முன்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டே உள்ளே விடப்படுகின்றனர். குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து நாளை மாலை வரை வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதற்காக போதிய பேருந்து இயக்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications