காரில் செல்ல வசதியில்லை.. கோவை டூ சென்னை.. பஸ்ஸில் பயணம் செய்து முதல்வரை சந்தித்த கல்பனா! யார் இவர்?
சென்னை: திமுக சார்பில் மேயராக அறிவிக்கப்பட்ட 20 மாநகராட்சிகளின் வேட்பாளர்களில் பலர் பெண்கள், பட்டதாரிகள் என்பதை எல்லாம் தாண்டி எளிமையான பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 200 வார்டுகளில் திமுக 153 வார்டுகளிலும் அதிமுக 15 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4 வார்டுகளிலும் மதிமுக இரு வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது.

சென்னை மாநகராட்சி
மேலும் சென்னை மாநகராட்சியில் 5 சுயேச்சைகள் வென்றனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

21 மேயர்கள்
இந்த 21 மேயர்களில் ஒரே ஒரு மேயர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுக. மற்ற 20 மாநகராட்சிகளிலும் திமுகவைச் சேர்ந்தவர்களை மேயர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இந்த 20 பேரில் 11 பேர் பெண்களாவர். 20 மாநகராட்சிகளுக்கு பெரும்பாலும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே மேயர் வேட்பாளராக திமுக அரிவித்துள்ளது.

திண்டுக்கல் இளமதி
இதில் திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக இளமதி அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டியிட்டு வெற்றி பெற்ற இளமதி கட்சிக்காக உழைத்து வருபவர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரான இளமதி எளிமையான முறையில் அணுகக் கூடியவர். இதற்கு முன்பு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவர் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தனது வட்டத்தில் செய்துள்ளார்.

கோவை மேயர்
அது போல் கோவை மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவை மாநகராட்சியில் 19 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1971 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வசதியின்மை காரணமாக பேருந்திலேயே சென்னை சென்று வந்தவர்.












Click it and Unblock the Notifications