எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு -பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழாசிரியராக பணியை தொடங்கி கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்களை அடைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ;

புரட்சிக் கவிஞர்
'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசன் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு புதுச்சேரியில் 29.04.1891 அன்று மகனாகப் பிறந்தார். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை இணைத்து 'கனகசுப்புரத்தினம்' என்று அழைக்கப்பட்டார். தனது இளம் வயது தொடங்கி தமிழ் மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். 1946 ஆம் ஆண்டு அவரது "அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் 'தங்கக் கிளி பரிசு' வென்றார்.

சாகித்ய அகாடமி
பாரதியாரிடம் நெருங்கிய நட்பு கொண்ட பாரதிதாசன், அன்று முதல் பாரதியை தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். 'பிசிராந்தையார்' நாடகத்திற்காக 1970ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் மறைவிற்குப் பிறகு 'சாகித்ய அகாடமி விருது' வழங்கப்பட்டது.

தமிழாசிரியர்
பாரதிதாசன் ஒரு தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. பாவேந்தர் பாரதிதாசன் 86க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

சங்கே முழங்கு
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு', "தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் தான் பாவேந்தர் பாரதிதாசன். தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசனை "தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்" என்று பெரியாரும், 'புரட்சிக் கவிஞர்' என்று அண்ணாவும் போற்றினர். 06.05.1990 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் சிலையைத் கருணாநிதி நிறுவி அதனை திறந்தும் வைத்தார். 02.01.1968 அன்று நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பாவேந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் சிலை திறந்து வைக்கப்பட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications